ரயில்வே வேலையை ராஜினாமா செய்து விட்டு.. காங்கிரசில் இணைந்த வினேஷ் போகத்!

Sep 06, 2024,04:10 PM IST

புதுடில்லி: ரயில்வே பணியை ராஜினாமா செய்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றம் பஜ்ரங் புனியா இருவரும் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கட்சியில் இணைந்த இருவரும் ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக களம் காண உள்ளனர். 

ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது.  அக்டோபர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஹரியானா சட்டசபை தேர்தலில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, ஜேஜேபி கட்சி ஆகியவற்றுடன் தீவிரமான கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது காங்கிரஸ். 



இந்நிலையில், பாஜக எம்பி பிரிஜ்பூஷனுக்கு எதிராக டெல்லியில் போராடிய மல்யுத்த  வீரர்களையும் தேர்தல் களத்தில் காங்கிரஸ் களம் இறக்குகிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க வாய்ப்பை இழந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இருவரும் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து கட்சியில் இணைந்தனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் இன்று காங்கிரஸில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன வீட்டில் முறைப்படி இருவரும் காங்கிரஸ்சில் இணைந்தனர். மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு ஆதரவாக மத்திய அரசு நிற்கிறது. நாங்கள் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்கள் பக்கம் நிற்கிறோம். இவ்விருவரும் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

வடக்கு ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணிசெய்து வந்த வினேஷ் போகத் தற்போது தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.இது குறித்து வினேஷ் போகத் கூறுகையில்,"ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாது" என தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் தான் அவர் பணியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்