டெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக அவர் கூறியுள்ளார். இந்தத் தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
விராட் கோலி விலகல் குறித்து தேவையில்லாத ஊகங்களுக்குள் யாரும் போக வேண்டாம் என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் விலகியுள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். தனது முடிவு குறித்து கேப்டன் ரோஹித் சர்மாவிடமும், அணி நிர்வாகத்திடமும் விராட் கோலி ஏற்கனவே பேசியுள்ளார் என்றும் ஜெய்ஷா விளக்கியுள்ளார்.
விராட் கோலிக்குப் பிறகு தற்போது வேறு வீரர் சேர்க்கப்படவுள்ளார். ஜனவரி 25ம் தேதி இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 42.36 என்ற சராசரியுடன் 1991 ரன்களை எடுத்துள்ளார். கடைசியாக அவர் தென் ஆப்பிரிக்காவில் விளையாடினார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடவில்லை. அதேசமயம், கடைசி 2 போட்டிகளில் விளையாடினார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறும்.
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை இருக்குனு தெரியுமா... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும்: திருமாவளவன்!
தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி.. 2026ல் தவெக வாகை சூடும்: விஜய்
கோவை மாணவி வன்கொடுமை.. 4மணிநேரம் என்ன செய்தது காவல்துறை: எடப்பாடி பழனிச்சாமி!
கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம்... கூட்டணி தானாக அமையும்... கவலை வேண்டாம் எடப்பாடி பழனிச்சாமி
துல்கர் சல்மானுக்குச் சிக்கல்..காலாவதி தேதி போடாத அரிசிவிற்ற..நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால்!
நாயகன் மீண்டும் வர்றார்.. ரோபோ சங்கருக்கு மரியாதை செய்யும் சென்னை கமலா தியேட்டர்!
30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர்... விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை: புஸ்ஸி ஆனந்த்
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் தங்கம் விலை... நேற்று மட்டும் இல்லங்க... இன்று குறைவு தான்
{{comments.comment}}