டெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக அவர் கூறியுள்ளார். இந்தத் தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
விராட் கோலி விலகல் குறித்து தேவையில்லாத ஊகங்களுக்குள் யாரும் போக வேண்டாம் என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் விலகியுள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். தனது முடிவு குறித்து கேப்டன் ரோஹித் சர்மாவிடமும், அணி நிர்வாகத்திடமும் விராட் கோலி ஏற்கனவே பேசியுள்ளார் என்றும் ஜெய்ஷா விளக்கியுள்ளார்.
விராட் கோலிக்குப் பிறகு தற்போது வேறு வீரர் சேர்க்கப்படவுள்ளார். ஜனவரி 25ம் தேதி இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 42.36 என்ற சராசரியுடன் 1991 ரன்களை எடுத்துள்ளார். கடைசியாக அவர் தென் ஆப்பிரிக்காவில் விளையாடினார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடவில்லை. அதேசமயம், கடைசி 2 போட்டிகளில் விளையாடினார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறும்.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}