டெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக அவர் கூறியுள்ளார். இந்தத் தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
விராட் கோலி விலகல் குறித்து தேவையில்லாத ஊகங்களுக்குள் யாரும் போக வேண்டாம் என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் விலகியுள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். தனது முடிவு குறித்து கேப்டன் ரோஹித் சர்மாவிடமும், அணி நிர்வாகத்திடமும் விராட் கோலி ஏற்கனவே பேசியுள்ளார் என்றும் ஜெய்ஷா விளக்கியுள்ளார்.
விராட் கோலிக்குப் பிறகு தற்போது வேறு வீரர் சேர்க்கப்படவுள்ளார். ஜனவரி 25ம் தேதி இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 42.36 என்ற சராசரியுடன் 1991 ரன்களை எடுத்துள்ளார். கடைசியாக அவர் தென் ஆப்பிரிக்காவில் விளையாடினார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடவில்லை. அதேசமயம், கடைசி 2 போட்டிகளில் விளையாடினார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறும்.
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!
"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு
எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்
ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!
டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்
Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?
சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!
{{comments.comment}}