- பா. பானுமதி
விஷால் தினமும் பேருந்து பயணம் செய்வதால் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் அவனுக்கு மாமா ஆகி விடுவார்கள் விஷால் நிறைய பேருக்கு மருமகன்.
திருப்பரங்குன்றம் குசவபட்டியில் வேலை செய்யும்போது விஷாலுக்காக சற்று நேரம் பஸ் காத்திருப்பது என்று நடக்கும் . விஷாலின் தன்னுடைய தின்பண்டங்களை எல்லாம் தன்னுடைய மாமாவிற்கு கொடுத்து அவர்களிடம் அன்பை பரிமாறிக் கொள்வான்.
பேருந்து பயணத்தின் போது நடத்துனர் சீட்டில் விஷால் அமர்ந்து கொள்வான். நடத்துனரும் விஷால் இடம் பேசிக் கொண்டே வருவார் அதில் ஒருவர் பெயர் காசிநாதன்.
விஷால் இடம் பிரியம் கொண்டு மாப்பிள்ளை என்று வாய் நிறைய அழைப்பார். அதை பார்த்த ஓட்டுநர் மாப்பிள்ளை என்கிறீர்களே உங்கள் பொண்ணை தரப் போகிறீர்களா என கேட்க...
"ஆமா பா... "

" விஷால் உனக்கு என் பெரிய பொண்ணு வேணுமா சின்ன பொண்ணு வேணுமா "
" சின்ன பொண்ணு எட்டாவது படிக்கிற ஆனா அவளுக்கு வாய் அதிகம் டா கண்ணாடி வேற போட்டு இருக்கா "
" வேணாம் அவ உனக்கு சரி பட்டு வரமாட்டா... நீ பெரிய பொண்ணையே கட்டிக்கோ "
" பெரிய பொண்ணு 12வது படிக்கிற பொறுமையா இருப்பா. உன்னை நல்லா பாத்துக்குவா... இடுப்புல தூக்கி வைச்சுக்கவா. சோறு ஊட்டு வா என்ன சொல்ற" எதற்கும் விஷால் இடமிருந்து பதில் இல்லை. அவன் மாமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்
" அண்ணா விஷாலுக்கு உன் மகளை பிடிக்கல போல" நடத்துனர்
"என்ன விஷால் ரெண்டு பேரும் புடிக்கலையா வேற யாரும் இல்லையே "
"மாப்ள! அத்தை மட்ட வேணும்னு கேட்டுராத"
" எனக்கு சமைச்சு போடவும் என் துணியை துவச்சு போடவும் அத்தையை தவிர யாருமே இல்லை "
இப்படி அவர் சொல்ல விஷாலுக்கு என்ன புரிந்ததோ வேகமாக சத்தமாக சிரித்து விட பேருந்தில் இருந்த அனைவரும் அதை கேட்டு சிரித்தனர்.
விளையாட்டு தொடரும்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}