சென்னை: நடிகர் விஷால் தனது மக்கள் நல இயக்கத் தொண்டர்களை சந்திக்க தூத்துக்குடி செல்கிறார்.
கடந்த 2018ம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களை சமூக நல இயக்கமாக மாற்றினார் நடிகர் விஷால். மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் அவரது மன்றங்கள் இயங்கி வருகின்றன.
நடிகர் விஷால் 2018ம் ஆண்டு அரசியலில் புகும் நோக்கில் செயல்பட்டு வந்தார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடவும் அவர் முயன்றார். ஆனால் அவரது வேட்பு மனு தள்ளுபடியாகி விட்டது. அதன் பின்னர் அவர் நடிப்பில் கவனம் செலுத்தப் போவதாக கூறினார். அதேசமயம், தனது ரசிகர் மன்றங்களை அதே ஆண்டில் மக்கள் நல இயக்கமாக மாற்றினார் விஷால்.

இது அவரது தனிக் கட்சியாக மாறுமா என்ற விவாதமும் அப்போது எழுந்தது. ஆனால் எந்த வேகத்தில் எழுந்தாரோ அதே வேகத்தில் வேகம் குறைந்து போனது விஷாலின் இயக்கம். இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது அமைப்பினரை சந்திக்க கிளம்புகிறார் விஷால்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள், நகரம், ஒன்றியம், பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மக்கள் நல இயக்கத்தின் உறுப்பினர்களை தூத்துக்குடியில் வைத்து அக்டோபர் 8ம் தேதி சந்திக்கவுள்ளார் விஷால்.
தூத்துக்குடி வேம்பார் பகுதியில் உள்ள கே. காமராஜர் அரங்கத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு எதற்காக என்று தெரியவில்லை. மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணத்தில் விஷால் இருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த சந்திப்புக்கு வருவோர், விஷாலுக்கு சால்வை, மாலை போன்ற எந்த பரிசு பொருட்களையும் கொண்டுவர வேண்டாம் அதற்காக ஆகும் செலவை ஏழை, எளிய பொதுமக்களுக்கு உதவும்படி கேட்டுக் கொள்வதாக மக்கள் நல இயக்க செயலாளர் வி.ஹரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
                                                                            இந்த வாழ்க்கை ஒரு கனவா?
 
                                                                            பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
 
                                                                            12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
 
                                                                            பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
 
                                                                            2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
 
                                                                            Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
 
                                                                            மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
 
                                                                            நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
 
                                                                            காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}