வாஷிங்டன்: அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் அலை பரப்பி வந்த நிலையில், திடீரென போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி.
அமெரிக்க அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாராத சர்ப்பிரைஸாக வந்தவர் விவேக் ராமசாமி. படு வேகமாக இவர் மக்களிடையே பிரபலமாகி வந்தார். இவரது அதிரடியான பேச்சுக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தன. எலான் மஸ்க் முதல் பலரும் இவருக்கு ரசிகர்கள் ஆனார்கள்.
விவேக் ராமசாமிதான் குடியரசுக் கட்சி வேட்பாளராக வருவார் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதனால் மீண்டும் தேர்தல் களத்தில் குதித்த டொனால்ட் டிரம்ப்புக்கே கூட கடும் சவாலாக மாறியிருந்தார் விவேக் ராமசாமி. இந்த நிலையில் தற்போது திடீரென வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் விவேத் ராமசாமி.

இதுதொடர்பான அறிவிப்பை அயோவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிட்டார் விவேக் ராமசாமி. அயோவாவில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகளிடையே விவேக் ராமசாமிக்கு ஆதரவு சுத்தமாக இல்லை. வெறும் 2 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் தான் போட்டியிலிருந்து விலக முடிவு செய்தார் விவேக் ராமசாமி.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்காதான் முதலில் என்ற நோக்கத்துடன் இரு வேட்பாளர்கள் உள்ளோம். இதில் நான் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளேன். இதை டிரம்ப்புக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து விட்டேன். எனது முழு ஆதரவுடன் அவர் இனி முன்னேறிச் செல்வார் என்றார் விவேக் ராமசாமி.
விவேக் ராமசாமியின் விலகல் மூலம், டொனால்ட் டிரம்ப்பின் கை தற்போது மேலும் ஓங்கியுள்ளது. அவரே மீண்டும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்புகள் பெருகியுள்ளன. இதற்கிடையே, அயோவா பிரதிநிதிகளின் 40 வாக்குகளில் 20க்கும் மேலானோரின் வாக்குகளை டிரம்ப் பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோவாவைத் தொடர்ந்து நியூ ஹாம்ப்ஷயரில் ஜனவரி 23ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதிலும் டிரம்ப்புக்கே அதிக ஆதரவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!
புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!
சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை
மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!
பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!
பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா
{{comments.comment}}