- வே.ர.விஜயலட்சுமி
உலக உயிர்கள் இன்புற்று வாழ்வே
தன்னுயிர் ஈந்தார் அன்பு என்னும் அறவழி நின்று
இரக்கம் காட்டி மனிதருக்கு மனிதர் அபிமானம் கொண்டு
தவறுக்கு மன்னித்து விதண்டாவாதம் புரியாமல்
விட்டுக்கொடுத்து வாழ வழியற்று இருப்போருக்கு வழிகாட்டி
பசித்திருப்போருக்கு பாசமாய் உணவளித்து
பிறர் துன்பமதனை தனது என எண்ணி காப்போர்
தேவனுடைய குழந்தைகளே!!!!

வாழ்ந்து காட்டியுள்ளார் எம் தேவன்!!!!!
மனித குலத்துக்கு தனது உதிரத்தை தானமாக்கினார்.....
இன்னுயிரை தரும் முன்னர் அவர் பட்ட பாடுகள் எத்துணை ?எத்துணை?
தம் சிலுவையை தாமே சுமந்து முட் கிரீடம் தாங்கி சாட்டையடி பெற்று
கயவர் கூட்டத்தால் கள்வரோடு சிலுவையில் அறையப்பட்டு
மாண்டார் எங்கள் இயேசுபிரான்....
நெஞ்சு பொறுக்குதில்லையே.. நிலைத்திரிந்த அசுர மனம் கொண்டோரை நினைத்துவிட்டால்.....
மனிதரது உதிரத்தால் கழுவி பாபவிமோசனம் அருளிய ஆண்டவரே!!!
எம் இதயத் தேவனே!!!!
உமது சிறகுகளுக்குள் எமக்கு நல் அடைக்கலம் தாருமைய்யா!!!!
கண்ணிருந்தும் குருடராய் வாழ்ந்திடும் எங்களுக்கு நல் வழி அருளி ஆசிகள் அருளும் அய்யா!!!!!
(V.R. VIJAYALAKSHMI,GRADUATE TEACHER, KANCHIPURAM DISTRICT TAMILNADU, INDIA )
Chennai Super Kings vs RCB: கோட்டை விட்டதைப் பிடித்தார் ஷிவம் துபே.. வச்சு செய்த விராட் கோலி.. அவுட்
US rescue OP: அமெரிக்க வீரரை ஈரானிலிருந்து மீட்டு விட்டோம்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
48 மணி நேரததிற்குள் தாக்குதல்.. டிரம்ப்பின் மிரட்டல் முட்டாள்தனமானது.. ஈரான் கடும் காட்டம்
Happy Easter.. உயிர்த்தெழுந்தார் எம் தேவன்!
ஏசு பாலன் வருகிறார்!
Sripriya Short stories: பசிக்க விடு, பலமாக வளரும்!
ஈஸ்டர் திருநாள்.. உயிர்த்தெழுந்த நாயகன்!
சிலுவையை மீட்பின் அடையாளமாக்கியவரே!
உயிர்த்தெழுந்த நம்பிக்கை – ஈஸ்டர் திருநாளின் அழகான கதை
{{comments.comment}}