டாக்கா: வங்கதேசத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. டாக்கா அருகே F-7 ரக போர் விமானம் ஒன்று கல்லூரி மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்காவிலிருந்து சுமார் 31 நிமிடம் பயண தூரத்தில் உள்ள உத்தராவில் இந்த விபத்து நடந்தது. மில்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி அருகே விமானம் விழுந்தது. விமானம் விழுந்ததும் தீப்பிடித்து எரிந்தது. தூரத்தில் இருந்து பார்த்தாலே புகை தெரிந்தது. விமானியின் நிலை என்னவென்று உடனடியாக தெரியவில்லை.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், F-7 BGI பயிற்சி விமானம் இன்று மதியம் 1:06 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கல்லூரி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விபத்து குறித்து அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. தீயை அணைக்க எட்டு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு சேவை மைய கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி லிமா கானம் இது குறித்து கூறுகையில், டயபரியில் உள்ள மில்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. எங்கள் குழு ஒரு உடலை மீட்டெடுத்துள்ளது. விமானப்படை காயம் அடைந்த நான்கு பேரை மீட்டு சென்றுள்ளது என்று அவர் கூறினார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விமானத்தில் இருந்த விமானிகள் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை. விபத்துக்குள்ளான விமானம் பயிற்சி விமானம் என்று கூறப்படுகிறது. இது மக்கள் நிறைந்த பகுதியில் விழுந்ததால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் இப்படித்தான் லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல இப்போது வங்கதேசத்தில் பள்ளி வளாகத்தில் போர் விமானம் விழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் .. சர்வதேச யோகா தினம்.. மாணவர்கள் அசத்தல்
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
பூரிக்கும் புன்னகைக்கு பூக்களும் சிரிக்குமே
சிந்தனைச் சிதறல்.. வளமைக்கு ஒரு காலம் என்றால்.. மகிழ்ச்சிக்கு ஒரு காலம்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
When people come together as one... வெற்றி நமதே!
{{comments.comment}}