வயநாடு நிலச்சரிவு.. 200க்கும் மேற்பட்டோரின் கதி என்ன?.. தீவிரமாக தொடரும் தேடுதல் வேட்டை

Aug 05, 2024,11:33 AM IST

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமாக உள்ள  200க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன என்று தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப் குழுவினர் ஏழாவது நாளாக போராடி வருகின்றனர்.


மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள வயநாடு மாவட்டம் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. குறிப்பாக முண்டக்கை, மேப்பாடி, சூரல் மலை போன்ற பகுதிகள் மண்ணோடு மண்ணாக தரைமட்டமானது. இதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோரின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. ராணுவம், இந்திய பேரிடர் மீட்பு குழுவினர், கேரள ராணுவத்தினர், காவல் துறையினர் உள்ளிட்ட பலரும் களப்பணி ஆற்றி வருகின்றனர். 




இதுவரை அடையாளம் தெரியாத 8 பேர் உடல்களை, அடையாளம் காண்பதற்கு உறவினர்கள் யாரும் வருவார்களா என்ற அடிப்படையில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும்  தொடர்ந்து  8 பேரின் உடல்களை அடையாளம் காணவில்லை. இதனால் அடையாளம் காணாத சடலங்களை  நல்லடக்கம் செய்ய மத்திய அரசு வலியுறுத்தியது. இதையடுத்து மேப்பாடி அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 சடலங்களும் புத்துமலை அருகே ஒரே இடத்தில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டன.


இந்த நிலையில் முண்டக்கை, மேப்பாடி சூரல் மலை ஆகிய பகுதிகளில் ஏழாவது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் 1000 பேர் ஈடுபட்டுள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது‌. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி  தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்