வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமாக உள்ள 200க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன என்று தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப் குழுவினர் ஏழாவது நாளாக போராடி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள வயநாடு மாவட்டம் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. குறிப்பாக முண்டக்கை, மேப்பாடி, சூரல் மலை போன்ற பகுதிகள் மண்ணோடு மண்ணாக தரைமட்டமானது. இதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோரின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. ராணுவம், இந்திய பேரிடர் மீட்பு குழுவினர், கேரள ராணுவத்தினர், காவல் துறையினர் உள்ளிட்ட பலரும் களப்பணி ஆற்றி வருகின்றனர்.

இதுவரை அடையாளம் தெரியாத 8 பேர் உடல்களை, அடையாளம் காண்பதற்கு உறவினர்கள் யாரும் வருவார்களா என்ற அடிப்படையில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தொடர்ந்து 8 பேரின் உடல்களை அடையாளம் காணவில்லை. இதனால் அடையாளம் காணாத சடலங்களை நல்லடக்கம் செய்ய மத்திய அரசு வலியுறுத்தியது. இதையடுத்து மேப்பாடி அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 சடலங்களும் புத்துமலை அருகே ஒரே இடத்தில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் முண்டக்கை, மேப்பாடி சூரல் மலை ஆகிய பகுதிகளில் ஏழாவது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் 1000 பேர் ஈடுபட்டுள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
{{comments.comment}}