வயநாடு நிலச்சரிவு.. ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன்

Aug 01, 2024,12:27 PM IST

திருவனந்தபுரம்:   வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று   கேரள முதல்வர்  பினராயி விஜயன் பார்வையிட்டார்.


கேரள மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வந்தது. தொடர் மழை காரணமாக வயநாடு மாவட்டம், முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.திடீர் என இரவில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் மீது மண், பாறைகள், மரங்கள் விழுந்தது. அப்பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280த் தாண்டியுள்ளது. 250க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 




மேலும் 500க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்பதால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் தற்காலிக பாலம் அமைக்கும் பணி மட்டும் இரவு முழுவதும் நடைபெற்று காலையில், 2 ஜேசிபி வாகனங்கள் அந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 


மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட பலர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வருகின்றனர். தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் என்று அச்சம் நிலவி வருகிறது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், கேரள முதல்வர் பிரனாயி விஜயன்   வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று   பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மீட்பு பணிகளை விரைந்து செய்யவும் முடுக்கிவிட்டுள்ளார். வயநாடு முன்னாள் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இன்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி

news

2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது

news

கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!

news

பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!

news

பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?

news

Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி

news

உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்

news

கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!

news

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்