சோகத்தில் வயநாடு.. ஓணம் கொண்டாட்டங்கள் பொது இடங்களில் வேண்டாம்.. கேரள அரசு அறிவிப்பு!

Aug 09, 2024,06:19 PM IST

வயநாடு:   வயநாடு நிலச்சரிவால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். அங்கு பதினோராவது நாளாக மீட்பு பணி தீவிரம் அடைந்து வரும் நிலையில் கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.


மலையாள மொழி பேசும் மக்களின் பிரதான  பண்டிகையான ஓணம் பண்டிகை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இது அவர்களின் பாரம்பரிய பண்டிகையும் கூட. இப் பண்டிகை பத்து நாட்கள் வரை மிகச் சிறப்பாக நடைபெறும். கேரளா மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு மிகவும் பரபரப்பாக காணப்படும்.




ஆனால் இந்த ஆண்டு வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி  கிராமங்களில் கடந்த 30ஆம் தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த  நிலச்சரிவால் அப்பகுதி முழுவதும்  தாரைமட்டமானது. இதனால் 400 க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த நிலச்சரிவில் மீட்க்கப்பட்ட பலர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.


இதற்கிடையே பதினோராவது நாளாக இன்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக போராடி வருகின்றனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மறுவாழ்விற்க்காக வாடகை வீடுகளில் தங்க வைக்கவும் அரசு சார்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் மாநில அளவிலான கொண்டாட்டங்களை தவிர்க்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த வருடம் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சாம்பியன்ஷிப் நடத்தும் படகு போட்டியையும் சுற்றுலாத்துறை ரத்து செய்துள்ளது. கேரள மக்கள் ஓணம் பண்டிகையை எளிமையாக வீட்டிலேயே கொண்டாடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் கேரளா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்