சோகத்தில் வயநாடு.. ஓணம் கொண்டாட்டங்கள் பொது இடங்களில் வேண்டாம்.. கேரள அரசு அறிவிப்பு!

Aug 09, 2024,06:19 PM IST

வயநாடு:   வயநாடு நிலச்சரிவால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். அங்கு பதினோராவது நாளாக மீட்பு பணி தீவிரம் அடைந்து வரும் நிலையில் கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.


மலையாள மொழி பேசும் மக்களின் பிரதான  பண்டிகையான ஓணம் பண்டிகை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இது அவர்களின் பாரம்பரிய பண்டிகையும் கூட. இப் பண்டிகை பத்து நாட்கள் வரை மிகச் சிறப்பாக நடைபெறும். கேரளா மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு மிகவும் பரபரப்பாக காணப்படும்.




ஆனால் இந்த ஆண்டு வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி  கிராமங்களில் கடந்த 30ஆம் தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த  நிலச்சரிவால் அப்பகுதி முழுவதும்  தாரைமட்டமானது. இதனால் 400 க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த நிலச்சரிவில் மீட்க்கப்பட்ட பலர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.


இதற்கிடையே பதினோராவது நாளாக இன்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக போராடி வருகின்றனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மறுவாழ்விற்க்காக வாடகை வீடுகளில் தங்க வைக்கவும் அரசு சார்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் மாநில அளவிலான கொண்டாட்டங்களை தவிர்க்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த வருடம் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சாம்பியன்ஷிப் நடத்தும் படகு போட்டியையும் சுற்றுலாத்துறை ரத்து செய்துள்ளது. கேரள மக்கள் ஓணம் பண்டிகையை எளிமையாக வீட்டிலேயே கொண்டாடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் கேரளா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்