வயநாடு: வயநாடு நிலச்சரிவால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். அங்கு பதினோராவது நாளாக மீட்பு பணி தீவிரம் அடைந்து வரும் நிலையில் கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.
மலையாள மொழி பேசும் மக்களின் பிரதான பண்டிகையான ஓணம் பண்டிகை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இது அவர்களின் பாரம்பரிய பண்டிகையும் கூட. இப் பண்டிகை பத்து நாட்கள் வரை மிகச் சிறப்பாக நடைபெறும். கேரளா மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு மிகவும் பரபரப்பாக காணப்படும்.

ஆனால் இந்த ஆண்டு வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி கிராமங்களில் கடந்த 30ஆம் தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் அப்பகுதி முழுவதும் தாரைமட்டமானது. இதனால் 400 க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த நிலச்சரிவில் மீட்க்கப்பட்ட பலர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே பதினோராவது நாளாக இன்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக போராடி வருகின்றனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மறுவாழ்விற்க்காக வாடகை வீடுகளில் தங்க வைக்கவும் அரசு சார்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாநில அளவிலான கொண்டாட்டங்களை தவிர்க்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த வருடம் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சாம்பியன்ஷிப் நடத்தும் படகு போட்டியையும் சுற்றுலாத்துறை ரத்து செய்துள்ளது. கேரள மக்கள் ஓணம் பண்டிகையை எளிமையாக வீட்டிலேயே கொண்டாடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் கேரளா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
{{comments.comment}}