டெல்லி: பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு லோக்சபா தொகுதியில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலையில் தொடங்கிய வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டபைக்கு இன்று முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதாதளம் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
கடந்த 2019 தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 தொகுதிகளிலும் பாஜக 25 தொகுதிகளும் வெற்றி பெற்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 47 தொகுதிகள் கிடைத்ததால் ஆட்சி அமைத்தது என்பது நினைவிருக்கலாம்.
இதுதவிர நாடு முழுவதும் 31 சட்டசபைத் தொகுதிகளுக்கும், வயநாடு லோக்சபா தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
ராஜஸ்தானில் 7 சட்டசபைத் தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 6, அஸ்ஸாம் 5, பீகார் 4, கேரளாவில் 3, மத்தியப் பிரதேசத்தில் 2, மேகாலயா, குஜராத், சட்டிஸ்கர், கர்நாடகத்தில் தலா 1 தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}