டெல்லி: பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு லோக்சபா தொகுதியில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலையில் தொடங்கிய வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டபைக்கு இன்று முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதாதளம் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

கடந்த 2019 தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 தொகுதிகளிலும் பாஜக 25 தொகுதிகளும் வெற்றி பெற்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 47 தொகுதிகள் கிடைத்ததால் ஆட்சி அமைத்தது என்பது நினைவிருக்கலாம்.
இதுதவிர நாடு முழுவதும் 31 சட்டசபைத் தொகுதிகளுக்கும், வயநாடு லோக்சபா தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
ராஜஸ்தானில் 7 சட்டசபைத் தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 6, அஸ்ஸாம் 5, பீகார் 4, கேரளாவில் 3, மத்தியப் பிரதேசத்தில் 2, மேகாலயா, குஜராத், சட்டிஸ்கர், கர்நாடகத்தில் தலா 1 தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிப்., 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்: புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
வேரின் விசேஷம்!
படு சூடாகி வரும் உலகம்.. என்னெல்லாம் ஆபத்து காத்திருக்கு தெரியுமா?
விஜய் கட்சி ஆபத்துல இருக்கு... அதனால தான் விசில் அடிக்கிறாங்க: ஜெயக்குமார் பேட்டி
தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை
தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழுவிபரம்!
இயற்கையின் சமநிலை.. இறைவனின் கணக்கு.. இதைப் புரிந்து கொள் மனிதனே!
தென்றல் தவழும்.. தமிழ் நாயகன் முருகனின்.. திருமலை திருக்கோவில்!
பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!
{{comments.comment}}