டெல்லி: பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு லோக்சபா தொகுதியில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலையில் தொடங்கிய வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டபைக்கு இன்று முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதாதளம் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

கடந்த 2019 தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 தொகுதிகளிலும் பாஜக 25 தொகுதிகளும் வெற்றி பெற்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 47 தொகுதிகள் கிடைத்ததால் ஆட்சி அமைத்தது என்பது நினைவிருக்கலாம்.
இதுதவிர நாடு முழுவதும் 31 சட்டசபைத் தொகுதிகளுக்கும், வயநாடு லோக்சபா தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
ராஜஸ்தானில் 7 சட்டசபைத் தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 6, அஸ்ஸாம் 5, பீகார் 4, கேரளாவில் 3, மத்தியப் பிரதேசத்தில் 2, மேகாலயா, குஜராத், சட்டிஸ்கர், கர்நாடகத்தில் தலா 1 தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மல்லிகையே ஓ மல்லிகையே..!
எடப்பாடி பழனிச்சாமியுடன் ராமதாஸ் தரப்பு பாமக எம்.எல்.ஏ அருள் திடீர் சந்திப்பு!
கனவுகளை நனவாக்கிய நாயகன்... முயற்சியின் முகம், வெற்றியின் சிகரம்!
"மேம், எங்கே போறீங்க?".. அவளின் (ல்) அவன் (2)
2026-27 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பட்ஜெட் 2026: மக்களின் நம்பிக்கையைத் தகர்த்த திமுகவின் 'கடைசி' ஏமாற்று வேலை: அண்ணாமலை
தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க இன்றும் குறைவு தான்... இதோ முழு விலை நிலவரம்!
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026-27.. தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
{{comments.comment}}