டெல்லி: பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு லோக்சபா தொகுதியில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலையில் தொடங்கிய வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டபைக்கு இன்று முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதாதளம் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

கடந்த 2019 தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 தொகுதிகளிலும் பாஜக 25 தொகுதிகளும் வெற்றி பெற்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 47 தொகுதிகள் கிடைத்ததால் ஆட்சி அமைத்தது என்பது நினைவிருக்கலாம்.
இதுதவிர நாடு முழுவதும் 31 சட்டசபைத் தொகுதிகளுக்கும், வயநாடு லோக்சபா தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
ராஜஸ்தானில் 7 சட்டசபைத் தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 6, அஸ்ஸாம் 5, பீகார் 4, கேரளாவில் 3, மத்தியப் பிரதேசத்தில் 2, மேகாலயா, குஜராத், சட்டிஸ்கர், கர்நாடகத்தில் தலா 1 தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!
My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!
{{comments.comment}}