தமிழகத்தில்.. இன்று நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.. தமிழ்நாடு வெதர்மேன் Happy news!

Jun 26, 2024,10:35 AM IST

சென்னை: தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 


அதே சமயம் கேரளாவில் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கேரளா செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில்  பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஓட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது வளிமண்டல சுழற்சி நீடித்து வருவதால் நேற்று வால்பாறை, கூடலூர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்தது.  கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள்,பணிக்குச் செல்வோர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் இப்பகுதியில் உள்ள கூழாங்கல் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.




இந்த நிலையில் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலை தீவிரமடைந்ததை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி வால்பாறையில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் தற்போது பெய்து வரும் அட மழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


கன்னியாகுமரி மற்றும் அதன் ஒட்டிய மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  கோவை மாவட்டம் நீலகிரி, வால்பாறை, கூடலூர், தேவாலா, பந்தலூர், அவலாஞ்சி, முகூர்த்தி, அப்பர் பவானி ஆகிய இடங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும்.


திருப்பூர்,தேனி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களிலும் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. இது தவிர தென்காசி, நெல்லை,மதுரை, விருதுநகர், போன்ற பகுதிகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.


கேரளா முழுவதும் பரவலாக அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், கண்ணூர், திருச்சூர், வயநாடு, இடுக்கி மூணாறு, பத்தனம்திட்டா மாவட்டத்தில் சூப்பர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். 


கேரளாவில் வரும் 28ம் தேதி வரை மழை நீடிப்பதால் வயநாடு, மூணாறு, இடுக்கி மலைப்பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும், வரும் ஜூன் 29 முதல் மழை அளவு படிப்படியாக குறையும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்