Orange Alert: டிசம்பர் 11, 12ம் தேதிகளில்.. தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு.. மிக கன மழை எச்சரிக்கை!

Dec 08, 2024,03:17 PM IST

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றவுத்தத் தாழ்வுப் பகுதியானது விரைவில் வலுவடையும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், வருகிற 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை அறிவித்துள்ளது.


ஃபெஞ்சால் புயல் ஓய்ந்துள்ள நிலையில் தற்போது வங்க்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளது. இது வலுவடைந்து தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்புச் செய்தி:


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைய கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பதினோராம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடற்கரை பகுதிகளில் ஒட்டி நிலவ கூடும்.




8ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை - தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 


10ம் தேதி - மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


11ம் தேதி - கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கள்ளக்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.


12-ம் தேதி - செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


13ஆம் தேதி - மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் தேனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!

news

அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!

news

Bharat Bandh: நாடு முழுவதும் 25 கோடித் தொழிலாளர்கள் ஸ்டிரைக்.. முடங்கும் முக்கிய சேவைகள்!

news

காமத் தீயில் வெந்து போனது காமுகனின் மனசு.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

2 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 09, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

news

அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி

news

வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, மக்களையும் ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி!

news

21 நாட்களில் பணம் இரட்டிப்பு.. பெங்களூரைக் கலக்கிய கேரள தம்பதி தலைமறைவு.. அதி நவீன மோசடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்