சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றவுத்தத் தாழ்வுப் பகுதியானது விரைவில் வலுவடையும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், வருகிற 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை அறிவித்துள்ளது.
ஃபெஞ்சால் புயல் ஓய்ந்துள்ள நிலையில் தற்போது வங்க்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளது. இது வலுவடைந்து தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்புச் செய்தி:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைய கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பதினோராம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடற்கரை பகுதிகளில் ஒட்டி நிலவ கூடும்.

8ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை - தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
10ம் தேதி - மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
11ம் தேதி - கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கள்ளக்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
12-ம் தேதி - செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
13ஆம் தேதி - மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் தேனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கொளத்தூரில் காட்டிய வீரியத்தப் பார்த்துமா இப்படிப் பேசுகிறீர்கள்.. திமுகவுக்கு முதல்வர் விஜய் பதிலடி
திமுகவுக்குப் பதிலடியாக.. கருணாநிதியின் ஆயுதத்தைக் கையில் எடுத்த முதல்வர் விஜய்!
ரீல்ஸ் ஆட்சி நடத்தாம ரியல் ஆட்சி நடத்துங்க... சட்டசபையில் அதிரடி காட்டிய உதயநிதி
பிள்ளை மீது சத்தியம் பண்ண தயாரா?.. இபிஎஸ்.,க்கு ஆவேசமாக சவால் விட்ட சி.வி.சண்முகம்
திமுக.,வுடன் 100% பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அடித்துச் சொன்ன இபிஎஸ்
இரண்டாகப் பிரிந்து ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்.. அடுத்து என்ன நடக்கும்?
ரதன் பண்டிட் நியமனம் .. கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் ரத்து செய்த முதல்வர் விஜய்!
பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் தப்பித்த மைனாரிட்டி திமுக அரசு.. டாக்டர் ராமதாஸ் அன்று எழுதியது!
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க - மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}