சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றவுத்தத் தாழ்வுப் பகுதியானது விரைவில் வலுவடையும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், வருகிற 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை அறிவித்துள்ளது.
ஃபெஞ்சால் புயல் ஓய்ந்துள்ள நிலையில் தற்போது வங்க்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளது. இது வலுவடைந்து தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்புச் செய்தி:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைய கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பதினோராம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடற்கரை பகுதிகளில் ஒட்டி நிலவ கூடும்.

8ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை - தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
10ம் தேதி - மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
11ம் தேதி - கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கள்ளக்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
12-ம் தேதி - செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
13ஆம் தேதி - மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் தேனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!
தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!
ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்
பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!
{{comments.comment}}