சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழகப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி

தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டு வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அடுத்த 48 மணி நேரத்தில் புதிய தாழ்வு பகுதியாக உருவாகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கன முதல் மிக கனமழை:
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று கன மழை:
கடலூர், மயிலாடுதுறை ,நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை, ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையை பொருத்தவரை இன்று முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.இதனை தொடர்ந்து நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக 12ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}