சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழகப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டு வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அடுத்த 48 மணி நேரத்தில் புதிய தாழ்வு பகுதியாக உருவாகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கன முதல் மிக கனமழை:
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று கன மழை:
கடலூர், மயிலாடுதுறை ,நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை, ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையை பொருத்தவரை இன்று முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.இதனை தொடர்ந்து நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக 12ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}