தமிழ்நாட்டை வச்சு செய்ய போகும் மழை .. 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ..வானிலை மையம்

Nov 08, 2024,07:41 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழகப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்கக் கடலில் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது. 


இந்த நிலையில் இந்த வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி




தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டு வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அடுத்த 48 மணி நேரத்தில் புதிய தாழ்வு பகுதியாக உருவாகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை நோக்கி  நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.


இன்று கன முதல் மிக கனமழை: 


கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி,  ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.


இன்று கன மழை: 


கடலூர், மயிலாடுதுறை ,நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை, ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.


சென்னை மழை: 


சென்னையை பொருத்தவரை இன்று முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.இதனை தொடர்ந்து நவம்பர்  12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக 12ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்