பிறக்கும் ஆண்டு பிறந்தாயிற்று.. வழக்கம்போல்.. புத்தாண்டு வாழ்த்துகள்.. சொல்லி கடந்து விடாமல்!

Jan 02, 2026,04:36 PM IST

- கவிஞர் சு நாகராஜன்


புதிய ஆண்டு

பொலிவுடன் பிறந்தாயிற்று

புதிய குழந்தையாய் 

தவழுவோம்- நாமும் 

பழையன மறந்து 

புதியன சிந்திப்போம்

விதியென நினைக்காமல்

சரியென நினைத்திடுவோம்




ஒவ்வொரு நாளும்

புத்தாண்டு போல

மகிழ்ந்திடுவோம்

நம்மை தோற்கடிக்க

எது வந்தாலும்

தைரியமாய்

முன் செல்வோம் -ஏனென்றால்

ஒவ்வொரு நாளும்

புதிய நாளே


அன்பை விதைத்து- நல்

மனிதர்களை 

அறுவடை செய்வோம்

சமுதாயத்திற்கு

விரோதமான செயல்களை 

சாக்கடையில் 

ஊற்றிவிட்டு 

சகோதர 

சகோதரிகளாய்

பயணம் செய்வோம் 


பொல்லாங்கன் எய்தும் 

அம்புகளை -பொடி

பொடியாக்கி விட்டு

சிறுவர் சிறுமியாய்

மாறிவிடுவோம் 

சின்னதாய் 

புன்னகை 

புரிந்திடுவோம்


பிறக்கும் ஆண்டு

பிறந்தாயிற்று 

வழக்கம்போல்

புத்தாண்டு வாழ்த்துகள்

என்று சொல்லி 

கடந்து விடாமல்

மனிதருக்காய்

சமுதாயத்திற்காய் 

தேசத்திற்காய் 

ஏதோ ஒரு மாற்றம் 

கொண்டுவர

புதிய ஆண்டிற்குள்

புன்னகையுடன்

நுழைந்திடுவோம்


(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

news

"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு

news

TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!

news

ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!

news

அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

news

Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

news

பூமியில் புதைந்த பூலான்தேவி

news

Tamil Poem: புதிய விடியல்

அதிகம் பார்க்கும் செய்திகள்