பிறக்கும் ஆண்டு பிறந்தாயிற்று.. வழக்கம்போல்.. புத்தாண்டு வாழ்த்துகள்.. சொல்லி கடந்து விடாமல்!

Jan 02, 2026,04:36 PM IST

- கவிஞர் சு நாகராஜன்


புதிய ஆண்டு

பொலிவுடன் பிறந்தாயிற்று

புதிய குழந்தையாய் 

தவழுவோம்- நாமும் 

பழையன மறந்து 

புதியன சிந்திப்போம்

விதியென நினைக்காமல்

சரியென நினைத்திடுவோம்




ஒவ்வொரு நாளும்

புத்தாண்டு போல

மகிழ்ந்திடுவோம்

நம்மை தோற்கடிக்க

எது வந்தாலும்

தைரியமாய்

முன் செல்வோம் -ஏனென்றால்

ஒவ்வொரு நாளும்

புதிய நாளே


அன்பை விதைத்து- நல்

மனிதர்களை 

அறுவடை செய்வோம்

சமுதாயத்திற்கு

விரோதமான செயல்களை 

சாக்கடையில் 

ஊற்றிவிட்டு 

சகோதர 

சகோதரிகளாய்

பயணம் செய்வோம் 


பொல்லாங்கன் எய்தும் 

அம்புகளை -பொடி

பொடியாக்கி விட்டு

சிறுவர் சிறுமியாய்

மாறிவிடுவோம் 

சின்னதாய் 

புன்னகை 

புரிந்திடுவோம்


பிறக்கும் ஆண்டு

பிறந்தாயிற்று 

வழக்கம்போல்

புத்தாண்டு வாழ்த்துகள்

என்று சொல்லி 

கடந்து விடாமல்

மனிதருக்காய்

சமுதாயத்திற்காய் 

தேசத்திற்காய் 

ஏதோ ஒரு மாற்றம் 

கொண்டுவர

புதிய ஆண்டிற்குள்

புன்னகையுடன்

நுழைந்திடுவோம்


(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்

news

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!

news

South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை

news

Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!

news

கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்

news

தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?

news

மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"

news

Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!

news

Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்