கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

Oct 13, 2025,06:22 PM IST

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இது குறித்து அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கரூர் வழக்கு என்பது எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ அல்லது அரசியல் கட்யோ சம்பந்தப்பட்டதல்ல, 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு.  சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சிபிஐ விசாரணைக்கு கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டதையும் வரவேற்கிறோம். கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்தது பாஜக தான்.


 யார் சார்ந்த நபராக இருந்தாலும் கரூர் துயரச் சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார். திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கை சிபிஐக்கு கொடுத்தார்கள். அரசியல் செய்வது நாங்களா இல்லை ஸ்டாலினா? யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




நீதிபதிகளைப் பற்றி நிறையும் சொல்லப் போவது இல்லை. குறையும் சொல்லப் போவது இல்லை. போலியாக மனு தாக்கல் செய்யப்பட்டதா என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும். அடுத்து குறுக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. நானே குறுக்கு விசாரணை நடத்தப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக

news

ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

news

புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!

news

Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

news

மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

news

Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்

news

லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!

news

Om Sai.. அன்பே சாய்!

news

Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்