கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

Oct 13, 2025,06:22 PM IST

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இது குறித்து அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கரூர் வழக்கு என்பது எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ அல்லது அரசியல் கட்யோ சம்பந்தப்பட்டதல்ல, 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு.  சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சிபிஐ விசாரணைக்கு கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டதையும் வரவேற்கிறோம். கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்தது பாஜக தான்.


 யார் சார்ந்த நபராக இருந்தாலும் கரூர் துயரச் சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார். திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கை சிபிஐக்கு கொடுத்தார்கள். அரசியல் செய்வது நாங்களா இல்லை ஸ்டாலினா? யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




நீதிபதிகளைப் பற்றி நிறையும் சொல்லப் போவது இல்லை. குறையும் சொல்லப் போவது இல்லை. போலியாக மனு தாக்கல் செய்யப்பட்டதா என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும். அடுத்து குறுக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. நானே குறுக்கு விசாரணை நடத்தப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்