காங்கிரஸுடன் கூட்டணி இல்லை.. மமதா பானர்ஜி அதிரடி அறிவிப்பு.. வடக்கில் சிதறுகிறதா இந்தியா கூட்டணி?

Feb 11, 2025,04:32 PM IST

கொல்கத்தா: 2026 சட்டசபை தேர்தலில் காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை. தேசிய அளவில் பா.ஜக.வை எதிர்கொள்ள அக்கட்சி தவறிவிட்டது என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக,ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடைசி நேரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருந்த எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடித்தது. மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.


டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாஜக தனிப்பெருபான்மையுடன் 27 ஆண்டுகளுக்கு  பிறகு ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து, இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இந்தியா கூட்டணி ஒற்றுமையாக செயல்படாதது தான் தோல்விக்கு காரணம் என தெரிவித்தன.




இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மமதா பானர்ஜி கூறுகையில்,  அடுத்த ஆண்டு எதிர்கொள்ளவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன். தொடர்ந்து டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பேசி அவர், டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. 


தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் வளைந்து கொடுத்து இருக்க வேண்டும். காங்கிரசால் டெல்லி மற்றும் ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றுவிட்டது. டெல்லியில் ஆம் ஆத்மியின் பயணத்தை காங்கிரஸ் கெடுத்து விட்டது.அது மேற்கு வங்கத்தில் நடக்காது. நமது வாக்குகளை யாராலும் பறிக்க முடியாது. காங்கிரசுடன் கூட்டணி இல்லை. தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன். ஆம் ஆத்மியும், காங்கிரசும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யாததே ஹரியானா, டெல்லி தோல்விக்கு காரணம். தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே, புரிதல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்