கொல்கத்தா: 2026 சட்டசபை தேர்தலில் காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை. தேசிய அளவில் பா.ஜக.வை எதிர்கொள்ள அக்கட்சி தவறிவிட்டது என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக,ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடைசி நேரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருந்த எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடித்தது. மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாஜக தனிப்பெருபான்மையுடன் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து, இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இந்தியா கூட்டணி ஒற்றுமையாக செயல்படாதது தான் தோல்விக்கு காரணம் என தெரிவித்தன.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மமதா பானர்ஜி கூறுகையில், அடுத்த ஆண்டு எதிர்கொள்ளவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன். தொடர்ந்து டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பேசி அவர், டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை.
தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் வளைந்து கொடுத்து இருக்க வேண்டும். காங்கிரசால் டெல்லி மற்றும் ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றுவிட்டது. டெல்லியில் ஆம் ஆத்மியின் பயணத்தை காங்கிரஸ் கெடுத்து விட்டது.அது மேற்கு வங்கத்தில் நடக்காது. நமது வாக்குகளை யாராலும் பறிக்க முடியாது. காங்கிரசுடன் கூட்டணி இல்லை. தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன். ஆம் ஆத்மியும், காங்கிரசும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யாததே ஹரியானா, டெல்லி தோல்விக்கு காரணம். தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே, புரிதல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!
எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?
புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. இன்று இரவுக்குள் கைது?
விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை.. தவெகவை சரமாரியாக விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி செந்தில்குமார்
கரூர் சம்பவம்... சிறப்பு புலனாய்வு குழு நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி குறித்த முதல்வர் முக ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு!
இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக: முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்
தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி... மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
{{comments.comment}}