காங்கிரஸுடன் கூட்டணி இல்லை.. மமதா பானர்ஜி அதிரடி அறிவிப்பு.. வடக்கில் சிதறுகிறதா இந்தியா கூட்டணி?

Feb 11, 2025,04:32 PM IST

கொல்கத்தா: 2026 சட்டசபை தேர்தலில் காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை. தேசிய அளவில் பா.ஜக.வை எதிர்கொள்ள அக்கட்சி தவறிவிட்டது என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக,ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடைசி நேரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருந்த எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடித்தது. மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.


டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாஜக தனிப்பெருபான்மையுடன் 27 ஆண்டுகளுக்கு  பிறகு ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து, இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இந்தியா கூட்டணி ஒற்றுமையாக செயல்படாதது தான் தோல்விக்கு காரணம் என தெரிவித்தன.




இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மமதா பானர்ஜி கூறுகையில்,  அடுத்த ஆண்டு எதிர்கொள்ளவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன். தொடர்ந்து டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பேசி அவர், டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. 


தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் வளைந்து கொடுத்து இருக்க வேண்டும். காங்கிரசால் டெல்லி மற்றும் ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றுவிட்டது. டெல்லியில் ஆம் ஆத்மியின் பயணத்தை காங்கிரஸ் கெடுத்து விட்டது.அது மேற்கு வங்கத்தில் நடக்காது. நமது வாக்குகளை யாராலும் பறிக்க முடியாது. காங்கிரசுடன் கூட்டணி இல்லை. தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன். ஆம் ஆத்மியும், காங்கிரசும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யாததே ஹரியானா, டெல்லி தோல்விக்கு காரணம். தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே, புரிதல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்