சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவில் அர்ச்சகர்கள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி. போட்ட டிவீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அர்ச்சகர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.
இன்று காலை ஆளுநர் ஆர்.என். ரவி, மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலுக்கு தனது மனைவியுடன் சென்று சாமி கும்பிட்டார். அதன் பிறகு அவர் ஒரு டிவீட் போட்டிருந்தார். அந்த டிவீட்டில் அவர் கூறியிருந்ததாவது:
இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.

பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது என்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.
அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.. அர்ச்சகர் பதில்
ஆளுநரின் இந்த டிவீட் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆளுநரின் கூற்றை மறுத்து அந்தக் கோவில் அர்ச்சகர் மோகன் பட்டர் என்பவர் பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சன் நியூஸ் சானலுக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறுகையில், அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இப்போ நீங்க சொல்லித்தான் தெரியுது. நாங்க யாருமே அப்படி இல்லை. புரோட்டோகால் பாலோ செய்யச் சொன்னார்கள், அதை பாலோ செய்தோம். அவ்வளவுதான். இன்று விசேஷம் என்பதால் நேற்று இரவு முதல் யாருமே தூங்கவில்லை. நாலைந்து பேர், கைங்கர்யம் செய்வோர் சரியாவே தூங்கலை. புஷ்ப அலங்காரம், சாமிக்கு அலங்காரம், நைவேத்யம் ரெடி செய்வது ஆகிய காரணத்தால் தூங்கவில்லை.
அனைவரும் டயர்டாக இருக்கிறோம்
எங்களுக்கு டயர்ட்னெஸ் இருந்தது. என் கண்ணைப் பார்த்தாலே தெரியும். ரெஸ்ட் இல்லாததால் அவருக்கு அப்படி தெரிந்திருக்கும். தேவஸ்தானம் நல்லாவே கோஆபரேட் செய்து சாமி தரிசனம் செய்து வைத்தோம். அவரும் மகிழ்ச்சியாகவே சென்றார். பிரசாதம் வாங்கிச் சென்றார். கோவில் தல வரலாறு குறித்துக் கேட்டார். அவருக்கு விளக்கிக் கூறினோம். அவர் சொன்னது போல அரசிடமிருந்து யாரும் எங்களிடம் பேசவில்லை. எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் அவர்.
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}