அடுத்து என்ன.. அடுத்து என்ன.. கேள்வி மனதை பிசைகிறதா..!?

Feb 06, 2023,04:41 PM IST
அடுத்து என்ன?? என்ற கேள்வி மனதை பிசைகிறதா..!! அடுத்து என்ன படிப்பது, அடுத்து என்ன வேலை பார்ப்பது, அடுத்து என்ன சாதிப்பது என்பது முதல் அடுத்த வேலை என்ன சமைப்பது அடுத்து அலமாரியின் எந்த அறையை அடுக்குவது என்பது வரை- அடுத்து என்ற வார்த்தையே நம்மை சிந்தனையில் தான் ஆழ்த்துகிறது..



சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக யோசனையில் ஆழ்ந்து குழம்பிவிடும் படி  ஆகிறது.. அதன் இறுதியில் நிலையில்லா முடிவு கொண்டு, அதை நிறைவேற்ற முயன்று பாதியில் ஏன், எதற்கு போன்ற பல கேள்விகளுடன், மனதில் ஒரு வெற்றிடம் கொண்டு, அயர்ந்து.. இனி நம்மால் ஏதும் செய்ய இயலாது அந்த திறன் இனி இல்லை என்று தோன்றும் நிலை வரலாம்..

ஆனால் அவை உண்மை அல்ல.. அடுத்து என்ற கேள்வியை உடைத்து விட்டு, இன்று என் மன நிம்மதியும் நிறைவும் மட்டும் தான் முக்கியம் என்று உறுதி கொண்டு, மனதை ஒருநிலைப்படுத்த முயலுங்கள்.. முதலில் கடினமாக தோன்றினாலும் முயன்றால் நடக்கும்..

பின்பு ஒருநிலை கொண்ட மனதோடு உங்களுடைய "அடுத்து என்ன" என்ற கேள்விக்கு நிலையான பதில் காணுங்கள்.. முந்தைய குழப்ப நிலையில் கொண்ட பதிலில் "என்ன என்ன குறை நிறைகள்" உள்ளது என ஆராயுங்கள்.. அப்போது நிச்சயமாக நல்ல தெளிவு பிறக்கும்..

சூரியனை மேகம் மறைப்பதால் சூரியன் கறை பட போவதும் இல்லை, சூரிய ஒளியால் பச்சை பசேல் என வளரும் பயிர்கள் சோர்ந்து போவதும் இல்லை... அதே போல் தான், குழம்பிய முடிவு எடுத்து, அதனால் தோற்க நேரிடுவதால் வெற்றி கைக்கு எட்டா கனியாக போவதில்லை..!

செடிகளுக்கு மேகம் தரும் மழையும் வெயில் தரும் இதமும் ஈரண்டுமே தேவை படுவது போல.. குழப்பங்களும் நல்லதே.. அவை வராவிட்டால் நாம் தெளிவாக இருப்பதை எப்படி உணர முடியும்.

குழப்பம் தந்து நமது மூளையை குடைய செய்யும் அந்த தருணங்களுக்கு நன்றி சொல்லுங்கள்.. அவை இல்லாமல் ஒருநிலை கொண்ட மனதின் அருமையும், இன்னல் தாங்க வலு கொண்ட நமது மனதின் பலமும் நமக்கு தெரியாலே போகும்.. 

எனவே மனதைப் பிசையும் அடுத்து என்ற கேள்விக்கு நிதானமாக பதில் கொடுங்கள்.. தெளிவான நீரோடை போல சிந்தனைகளிலும், அதன் தொடர்ச்சியாக தீர்வுகளிலும் மனம் இயல்பாகப் பதியும்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்