ஒட்டாவா : கனடா நாட்டின் பிரதம் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதனால் அங்கு அடுத்து என்ன நடக்கும் என உலக நாடுகள் அனைத்தும் ஆர்வமாக கவனித்து வருகின்றன.
2013ம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்ற ஜஸ்டின் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து தலைவராக நீடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், லிபரல் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அரசியல் நெருக்கடி மற்றும் உட்கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.
டிசம்பர் 31ம் தேதி நானோஸ் நடத்திய ஆய்வில், கன்சர்வேடிவ் கட்சி 26 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு 46.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதே சமயம் ஆளும் லிபரல் கட்சிக்கு மிக குறைந்த அளவே ஆதரவு கிடைத்திருந்தது. ஜஸ்டினின் ராஜினாமாவிற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
தன்னுடைய பதவி விலகலை அறிவித்த ஜஸ்டின், கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அந்த பதவியில் நீடிக்க உள்ளேன். அதற்கு பிறகு முறையாக என்னுடைய ராஜினாமாவை செய்ய உள்ளேன். கனடாவின் மிக நீண்ட வரலாற்றில் சிறுபான்மை பார்லிமென்ட் காரணமாக பல மாதங்களாக பார்லிமென்ட் முடங்கி உள்ளது. கவர்னர் ஜெனரலுக்கு புதிய பார்லிமென்ட் கூட்டத் தொடர் தேவை என அறிவுறுத்தினேன். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு. மார்ச் 24 வரை நாடாளமன்றத்தை அவர் ஒத்திவைத்துள்ளார் என்றார்.
53 வயதாகும் ஜஸ்டினுக்கு சொந்த கட்சியிலேயே ஆதரவு இல்லாத நிலை பல காலமாக இருந்து வந்தது. அது மட்டுமின்றி தற்போதைய சூழலில் கனடாவில் தேர்தல் நடைபெற்றால் லிபரல் கட்சி நிச்சயம் படுதோல்வியையே அடையும். இப்போது வரை புதிய கனடா பிரதமராக யாரை தேர்வு செய்ய போகிறார்கள் என்பது குறித்த எந்த தெளிவான முடிவும் எட்டப்படவில்லை. புதிய பிரதமரையும், கட்சியின் தலைவரையும் தேர்வு செய்யும் வாய்ப்பு லிபரல் கட்சிக்கு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
ஜஸ்டின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளதால் கட்சியின் தலைவராக இல்லாத ஒருவராக எப்படி பிரதமராக தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் இடைக்கால பிரதமர் மற்றும் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. யாராவது ஒருவரை பரிந்துரை செய்யலாம் அல்லது ஓட்டெடுப்பு நடத்தி புதிய பிரதமர் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. தற்போது கனடாவின் நிதியமைச்சராக இருக்கும் டோமினிக் லிபிளான்க் லிபரல் கட்சியின் இடைக்கால தலைவராகவும், கனடாவின் இடைக்கால பிரதமராகவும் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}