- கா.சா. ஷர்மிளா
ஒவ்வொரு குழந்தையும் சிறப்புதானே.. கடவுள்களைப் பிரித்துப் பார்க்க முடியுமா.. அப்படித்தானே குழந்தைகளும்.
குழந்தைப் பருவம் போல இனிமையானது எதுவுமே கிடையாது.. அதிலும் குழந்தைகளின் ஒவ்வொரு நகர்வும் ஒரு சொர்க்கம்தான்.. அந்த அனுபவத்தின் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தைத்தான் இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.
நான் பொது மாறுதலில் மாற்றல் பெற்று பள்ளிக்கு சென்ற முதல் நாளிலிருந்து ஒரு குழந்தை என்னை பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கும். சில நேரங்களில் ஒரு இடத்தில் தங்காது வெளியே வெளியே ஓடுவாள். வாயின் ஓரத்தில் இருந்து எச்சில் வழிந்துக் கொண்டே இருக்கும். பேசவே மாட்டாள். பேசவே அவளுக்கு வராது.

என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமென்றால் என்னை தட்டித் தட்டி தான் கேட்பாள், சரியாக 11 மணிக்கு எல்லாம் தூங்க ஆரம்பித்துவிடுவாள். 12 மணிக்கு எழுந்திருப்பா. உடனே சாப்பிடணும் அவளுக்கு. என்னை தட்டி தட்டி கேட்பாள். என்னிடம் உள்ள சாக்லேட்டை கொடுத்து சமாதானப்படுத்தி 12:40 வரைக்கும் சமாதானப்படுத்தி மதிய சாப்பாடு சாப்பிட வைப்பேன்.
அவள் பெயர் நிவேதா. ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். இரண்டு நாளில் என்னிடம் நன்று நன்கு பழகி விட்டாள். அவளின் அம்மா கூட என்னிடம் சொன்னார்கள், டீச்சர் என் பொண்ணு உங்ககிட்ட நல்லா பழகிட்டா என்று.
மூன்று மாதங்கள் சென்று அந்தக் குழந்தை என்னைப் பார்த்து "த்தே... த்தே"... என்று கூப்பிட்டாள். எனக்கு ஒரே சந்தோஷம். ஏனென்றால் என்னை அத்தை என்று யாரும் கூப்பிட்டதே இல்லை. எல்லோரும் ஆன்ட்டி என்று கூப்பிட்டு தான் பழக்கம். நிவேதா தான் முதலில் த்தே.. என்று கூப்பிட்டாள். முதலில் என்னை அத்தை என்று கூப்பிட்ட குழந்தை அவள் தான்.
அவள் முதலில் பேசிய வார்த்தையும் அது தான். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இறைவனின் படைப்பில் எத்தனை வேறுபாடு.. அக்குழந்தை மற்ற குழந்தைகள் போல் இல்லை she is special child!
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக
பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கம்: அண்ணாமலை
திமுக-அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள்...என்ன செய்ய போகிறார் விஜய்?
அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்
பூம்பூம் மாடு வளர்ப்பவர்களுடன் 'காணும் பொங்கல்' கொண்டாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை, பணி நீக்கம் செய்ய வேண்டும்: சீமான் ஆவேசம்!
வீரர்களின் கனவு நனவானது... ஜல்லிக்கட்டை தூக்கி சாப்பிட்ட முதலவர் முக ஸ்டாலினின் 2 அறிவிப்புக்கள்!
சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பெண்களுக்கு ரூ.2,000 உரிமைத்தொகை... ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்...இபிஎஸ் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}