- பா.பானுமதி
கண்ணிய காதல் காணாமல் போனதோ...
புனிதமான காதல் புறம் தள்ள பட்டதோ...
உண்மை காதல் உருக்குலைந்து போனதோ...
உயர போய் உட்கார்ந்து கொண்டதோ...
கடை சரக்கு போல காசுக்கு கிடைத்து விடுகிறதோ
இன்று தரம் இல்லாமல் தாழ்ந்து போனதோ நன்று?...

பொல்லாத காதல் புறப்பட்டு வந்து
சூறாவளி போல் சுற்றி அடிக்கிறதோ...
நல்ல காதல் நலம் கெட்டு போய் நாடு கடந்ததோ...
இனியகாதல் இலக்கியங்களில் இடம் பெற்றுக் கொண்டதோ
உளம் கனிந்த காதல் காவியங்களில் கரைந்து விட்டதோ...
வீதிகளில் வெளியிடங்களில்
பொது இடங்களில் என எங்கும் காதல் மலிந்து கிடக்கிறதே...
உடல் காதல் உண்டாகி உணர்வு தூண்டி செண்டாகி
பின் உதிர்ந்து வேறு திசைகளில் செல்வது சிறப்பு ஆகுமா...
கம்பன் சொன்ன காதல் என்றால்
கல் மேல் எழுத்தாகுமே
வள்ளுவன் சொன்ன காதல் என்றால்
வாழ்க்கை சிறப்பாகுமே..
பாரதி சொன்ன காதல் என்றால் பாரதம் பேசுமே
சங்க கால காதல்கள் சரித்திரம் தாண்டி நிற்குதே
இக்கால காதல் மட்டும்
விட்டுக் கொடுக்காமல் இடித்துக்கொண்டு உடையதே...
காதலர் தின களியாட்டம் விண்ணை முட்டுதே
விரைவில் மண்ணில் புதையுதே...
இது காலத்தின் கோலமா...
இந்த ஞாலத்தின் சாபமா...
விடை பகர்வார் யாரோ...?
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}