- பா.பானுமதி
கண்ணிய காதல் காணாமல் போனதோ...
புனிதமான காதல் புறம் தள்ள பட்டதோ...
உண்மை காதல் உருக்குலைந்து போனதோ...
உயர போய் உட்கார்ந்து கொண்டதோ...
கடை சரக்கு போல காசுக்கு கிடைத்து விடுகிறதோ
இன்று தரம் இல்லாமல் தாழ்ந்து போனதோ நன்று?...

பொல்லாத காதல் புறப்பட்டு வந்து
சூறாவளி போல் சுற்றி அடிக்கிறதோ...
நல்ல காதல் நலம் கெட்டு போய் நாடு கடந்ததோ...
இனியகாதல் இலக்கியங்களில் இடம் பெற்றுக் கொண்டதோ
உளம் கனிந்த காதல் காவியங்களில் கரைந்து விட்டதோ...
வீதிகளில் வெளியிடங்களில்
பொது இடங்களில் என எங்கும் காதல் மலிந்து கிடக்கிறதே...
உடல் காதல் உண்டாகி உணர்வு தூண்டி செண்டாகி
பின் உதிர்ந்து வேறு திசைகளில் செல்வது சிறப்பு ஆகுமா...
கம்பன் சொன்ன காதல் என்றால்
கல் மேல் எழுத்தாகுமே
வள்ளுவன் சொன்ன காதல் என்றால்
வாழ்க்கை சிறப்பாகுமே..
பாரதி சொன்ன காதல் என்றால் பாரதம் பேசுமே
சங்க கால காதல்கள் சரித்திரம் தாண்டி நிற்குதே
இக்கால காதல் மட்டும்
விட்டுக் கொடுக்காமல் இடித்துக்கொண்டு உடையதே...
காதலர் தின களியாட்டம் விண்ணை முட்டுதே
விரைவில் மண்ணில் புதையுதே...
இது காலத்தின் கோலமா...
இந்த ஞாலத்தின் சாபமா...
விடை பகர்வார் யாரோ...?
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?
தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மத்திய அமைச்சர் அமித்ஷா
அவர் எல்லாம் ஒரு ஆளா? அதெல்லாம் ஒரு கட்சியா?: நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!
40 சீட் கொடுத்தே தீரனும்...மீண்டும் புயலை கிளப்பிய மாணிக்கம் தாகூர்
சாயந்திரம் ஆயிருச்சா.. வாங்க வாழைக்காய் கனவறுவல் செஞ்சு சாப்பிடலாம்!
மதுரை மீனாட்சி நகரின் காதல்!
அன்பு!
தமிழகத்தை மீட்போம்: பிப். 21 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்! – அதிமுக அறிவிப்பு
உணர்வு
{{comments.comment}}