- பா.பானுமதி
கண்ணிய காதல் காணாமல் போனதோ...
புனிதமான காதல் புறம் தள்ள பட்டதோ...
உண்மை காதல் உருக்குலைந்து போனதோ...
உயர போய் உட்கார்ந்து கொண்டதோ...
கடை சரக்கு போல காசுக்கு கிடைத்து விடுகிறதோ
இன்று தரம் இல்லாமல் தாழ்ந்து போனதோ நன்று?...

பொல்லாத காதல் புறப்பட்டு வந்து
சூறாவளி போல் சுற்றி அடிக்கிறதோ...
நல்ல காதல் நலம் கெட்டு போய் நாடு கடந்ததோ...
இனியகாதல் இலக்கியங்களில் இடம் பெற்றுக் கொண்டதோ
உளம் கனிந்த காதல் காவியங்களில் கரைந்து விட்டதோ...
வீதிகளில் வெளியிடங்களில்
பொது இடங்களில் என எங்கும் காதல் மலிந்து கிடக்கிறதே...
உடல் காதல் உண்டாகி உணர்வு தூண்டி செண்டாகி
பின் உதிர்ந்து வேறு திசைகளில் செல்வது சிறப்பு ஆகுமா...
கம்பன் சொன்ன காதல் என்றால்
கல் மேல் எழுத்தாகுமே
வள்ளுவன் சொன்ன காதல் என்றால்
வாழ்க்கை சிறப்பாகுமே..
பாரதி சொன்ன காதல் என்றால் பாரதம் பேசுமே
சங்க கால காதல்கள் சரித்திரம் தாண்டி நிற்குதே
இக்கால காதல் மட்டும்
விட்டுக் கொடுக்காமல் இடித்துக்கொண்டு உடையதே...
காதலர் தின களியாட்டம் விண்ணை முட்டுதே
விரைவில் மண்ணில் புதையுதே...
இது காலத்தின் கோலமா...
இந்த ஞாலத்தின் சாபமா...
விடை பகர்வார் யாரோ...?
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
பெருந்தன்மையின் பொருள்.. விஷால் விளையாட்டுக்கள் (19)
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
சேலத்து மாம்பழம்.. பெங்களூரா மாம்பழம்... தித்திப்பா சாப்பிடுவோம்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
உன்னை அறிந்தால்!
Motivational Monday: தற்செயல் தரிசனங்கள்!
சிந்தனைச் சிதறல்.. வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலிகள் நிறைந்தது!
{{comments.comment}}