- பா. பானுமதி
மனைவி என்பவள் இஸ்ரோ விஞ்ஞானியா
எது வாங்கி வந்தாலும் அதில் குறை கண்டுபிடிப்பவளா
காய்கறி வாங்கி வந்தால் கண்ணை திறந்து வாங்க முடியாதா
கீரை வாங்கி வந்தால் பூச்சி தொல்லை
பால் என்றாலும் பார்த்து வாங்குவது இல்லையா பழையது
அல்வா வாங்கி வந்தாலும் அந்த கடை தவிர வேற கடை இல்லையா
பூ வாங்கி வந்தாலும் விலை ரொம்ப அதிகம்
எண்ணெய் வாங்கி வந்தாலும் நல் எண்ணெய் தானா
நொறுக்கு தீனி என்றால் சுருக்குனே இல்லையே
கோவிலுக்கு கூட்டிப் போனால் வேகமாக நடக்க தெரியாதோ
மாலுக்கு கூட்டிப் போனால் மெதுவாக நடக்க முடியாதோ

புடவை வாங்கி வந்தால் புதுசு மாதிரியே இல்லையே
பஜ்ஜி வாங்கி வந்தாலும் பழைய மாவு போல
வடை வாங்கி வந்தால் வாயில் வைக்க முடியல உப்பு அதிகம்
எது செய்தாலும் சரி இல்லை சரி நீயே போய் வாங்கிக்கொள் என்றாள்
ஒரு வேலை செய்ய தெரியாது இப்படியே வளர்ந்தாச்சு
ஒரு நாள் வியப்பாக இருக்கட்டுமே என்று ஒரு நகை வாங்கி வந்தேன்
திருமண நாளா பிறந்தநாளா தெரியவில்லை மறதி
மகிழ்ச்சியுடன் இருந்தாள் பொன் என்றதும் புன்னகைக்க செய்தாள்
இது எப்படி நிகழ்ந்தது இயற்பியல் மாற்றமா வேதியியல் மாற்றமா
உயிருக்குள் உண்டாகும் பொன்னின் மாற்றமா பெண்ணில் மாற்றம் எப்படி
விடை தெரிந்தவர்கள் விளக்கலாமே!!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}