ஏன் எதற்கு எதனால்?

May 15, 2026,03:27 PM IST

- பா. பானுமதி


மனைவி என்பவள் இஸ்ரோ விஞ்ஞானியா 


எது வாங்கி வந்தாலும் அதில் குறை கண்டுபிடிப்பவளா 

காய்கறி வாங்கி வந்தால் கண்ணை திறந்து வாங்க முடியாதா


கீரை வாங்கி வந்தால் பூச்சி தொல்லை 

பால் என்றாலும் பார்த்து வாங்குவது இல்லையா பழையது 


அல்வா வாங்கி வந்தாலும் அந்த கடை தவிர வேற கடை இல்லையா 

பூ வாங்கி வந்தாலும் விலை ரொம்ப அதிகம் 


எண்ணெய் வாங்கி வந்தாலும் நல் எண்ணெய் தானா

நொறுக்கு தீனி என்றால் சுருக்குனே இல்லையே 


கோவிலுக்கு கூட்டிப் போனால் வேகமாக நடக்க தெரியாதோ

மாலுக்கு கூட்டிப் போனால் மெதுவாக நடக்க முடியாதோ 




புடவை வாங்கி வந்தால் புதுசு மாதிரியே இல்லையே

பஜ்ஜி வாங்கி வந்தாலும் பழைய மாவு போல


வடை வாங்கி வந்தால் வாயில் வைக்க முடியல உப்பு அதிகம் 

எது செய்தாலும் சரி இல்லை சரி நீயே போய் வாங்கிக்கொள் என்றாள் 


ஒரு வேலை செய்ய தெரியாது இப்படியே வளர்ந்தாச்சு 

ஒரு நாள் வியப்பாக இருக்கட்டுமே என்று ஒரு நகை வாங்கி வந்தேன் 


திருமண நாளா பிறந்தநாளா தெரியவில்லை மறதி 

மகிழ்ச்சியுடன் இருந்தாள் பொன் என்றதும் புன்னகைக்க செய்தாள்


இது எப்படி நிகழ்ந்தது இயற்பியல் மாற்றமா வேதியியல் மாற்றமா 


உயிருக்குள் உண்டாகும் பொன்னின் மாற்றமா பெண்ணில் மாற்றம் எப்படி 


விடை தெரிந்தவர்கள் விளக்கலாமே!!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு.. ரூ.96.11 ஆகக் குறைந்தது

news

அதிமுக.,வில் முற்றும் மோதல்... கே.சி. வீரமணி மனமாற்றம்.. ஆளுநரை சந்திக்க இபிஎஸ் திட்டம்

news

ஏன் எதற்கு எதனால்?

news

டேக் கேர் ..ரதி ....மிஸ் யு ரதி.. அவளின் (ல்) அவன்! (15)

news

தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!

news

வைகாசி மாத சிறப்புகள்.. முருகப் பெருமான் அவதரித்த நன்னாள் வரும் மாதம்!

news

NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்