ஏன் எதற்கு எதனால்?

May 15, 2026,03:27 PM IST

- பா. பானுமதி


மனைவி என்பவள் இஸ்ரோ விஞ்ஞானியா 


எது வாங்கி வந்தாலும் அதில் குறை கண்டுபிடிப்பவளா 

காய்கறி வாங்கி வந்தால் கண்ணை திறந்து வாங்க முடியாதா


கீரை வாங்கி வந்தால் பூச்சி தொல்லை 

பால் என்றாலும் பார்த்து வாங்குவது இல்லையா பழையது 


அல்வா வாங்கி வந்தாலும் அந்த கடை தவிர வேற கடை இல்லையா 

பூ வாங்கி வந்தாலும் விலை ரொம்ப அதிகம் 


எண்ணெய் வாங்கி வந்தாலும் நல் எண்ணெய் தானா

நொறுக்கு தீனி என்றால் சுருக்குனே இல்லையே 


கோவிலுக்கு கூட்டிப் போனால் வேகமாக நடக்க தெரியாதோ

மாலுக்கு கூட்டிப் போனால் மெதுவாக நடக்க முடியாதோ 




புடவை வாங்கி வந்தால் புதுசு மாதிரியே இல்லையே

பஜ்ஜி வாங்கி வந்தாலும் பழைய மாவு போல


வடை வாங்கி வந்தால் வாயில் வைக்க முடியல உப்பு அதிகம் 

எது செய்தாலும் சரி இல்லை சரி நீயே போய் வாங்கிக்கொள் என்றாள் 


ஒரு வேலை செய்ய தெரியாது இப்படியே வளர்ந்தாச்சு 

ஒரு நாள் வியப்பாக இருக்கட்டுமே என்று ஒரு நகை வாங்கி வந்தேன் 


திருமண நாளா பிறந்தநாளா தெரியவில்லை மறதி 

மகிழ்ச்சியுடன் இருந்தாள் பொன் என்றதும் புன்னகைக்க செய்தாள்


இது எப்படி நிகழ்ந்தது இயற்பியல் மாற்றமா வேதியியல் மாற்றமா 


உயிருக்குள் உண்டாகும் பொன்னின் மாற்றமா பெண்ணில் மாற்றம் எப்படி 


விடை தெரிந்தவர்கள் விளக்கலாமே!!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

news

விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு

news

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

news

பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

news

பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!

news

சரியான முடிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்