நயினார் நாகேந்திரனை தனியாக சந்தித்தது ஏன்.. வதந்தி கிளப்பக் கூடாது.. எஸ்.பி. வேலுமணி ஆவேசம்!

Nov 23, 2024,01:33 PM IST

சென்னை: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை தான் சந்தித்ததை வைத்து வதந்தி கிளப்பக் கூாது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலு கண்டித்துள்ளார்.


முன்பு அதிமுகவில் இருந்தவர் நயினார் நாகேந்திரன். மறைந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர். பின்னர் காலப் போக்கில் அதிமுகவில் ஒதுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜக எம்எல்ஏவாக உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலிலும் கூட போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.


இந்த நிலையில் நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெல்லை வந்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நயினார் நாகேந்திரனை சந்தித்துப் பேசினார். இதை வைத்து பல்வேறு விதமான செய்திகள் வெளியாகின. இதுகுறித்து எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.




இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கழகக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினேன்.


அதன்பிறகு எனது குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்பொழுது, முன்னாள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வை, அரசியல் சாயம் பூசி செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில், எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்நிலையில் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக ஒரு நாளேடு செய்தி வெளியிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்