சென்னை: புனித ரமலான் மாதம் தொடங்கி விட்டது. முஸ்லீம்கள் புனித ரமலான் மாதத்தை நோன்பிருந்து முடித்து, பண்டிகையைக் கொண்டாடக் காத்துள்ளனர்.
இஸ்லாமில் ரமலான் மாதம் என்பது புனித மாதமாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பிருந்து கடைசி நாளை ரம்ஜான் பெருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். ரம்ஜான் மாதம் நோன்பு கடைப்பிடிப்பதன் மூலம், தங்களைத் தன்னம்பிக்கையுடன் கட்டுப்படுத்தி, எல்லா புலன்களையும் அடக்கி ஆன்மீக நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறார்கள் இஸ்லாமியர்கள்.
காலை முதல் மாலை வரை நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் அதன் பின்னர் நோன்பு திறப்பார்கள். அப்போது பேரிச்சை, பழங்கள், காய்கறிகள் போன்றவை அதிக அளவில் சாப்பிடுவது வழக்கம். இது நமது உடலின் சத்தை நீர்த்துப் போகச் செய்யாமல் பிடித்து வைத்திருக்க உதவும்.நோன்பு காலத்தில் உடலிலிருந்து நீர்ச்சத்தை இழந்து விடாமல் தடுக்க அதிகமான நீரை அருந்துவது வழக்கம். சிலர் தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு இருப்பதும் உண்டு.
விடியற்கால உணவு அதாவது சஹூர்.. விடியற்காலையில் ஆரோக்கியமான உணவுக்குப் பிறகு நோன்பு தொடங்கும். இப்தார் எனப்படும் நோன்பு திறப்பானது மாலையில், சூரியன் மறைவுக்குப் பிறகு தொடங்கும்.

ரம்ஜான் நோன்புக் காலத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல், தானம் கொடுப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்யலாம். நோன்பு காலத்தின்போது, வாக்குவாதம், குறைசொல்வது, கோபப்படுவது, சண்டை போடுவது போன்றவற்றில் ஈடுபடாமல் அமைதியான முறையில் நோன்புக் காலத்தைக் கடக்க வேண்டும்.
விரதம் அல்லது நோன்பு என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானது. பல்வேறு மதங்களிலும் இந்த விரதமானது நடைமுறையில் இருந்து வருவதுதான். நோன்பு காலத்தின்போது நமது உடல் சீராக மாறுகிறது. உடலின் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு உடலும், மனமும் நலமடைகிறது.
நோன்பு இருப்பதன் மூலம் தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் மன வலிமையையும் இது அதிகரிக்கிறது.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}