சென்னை: புனித ரமலான் மாதம் தொடங்கி விட்டது. முஸ்லீம்கள் புனித ரமலான் மாதத்தை நோன்பிருந்து முடித்து, பண்டிகையைக் கொண்டாடக் காத்துள்ளனர்.
இஸ்லாமில் ரமலான் மாதம் என்பது புனித மாதமாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பிருந்து கடைசி நாளை ரம்ஜான் பெருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். ரம்ஜான் மாதம் நோன்பு கடைப்பிடிப்பதன் மூலம், தங்களைத் தன்னம்பிக்கையுடன் கட்டுப்படுத்தி, எல்லா புலன்களையும் அடக்கி ஆன்மீக நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறார்கள் இஸ்லாமியர்கள்.
காலை முதல் மாலை வரை நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் அதன் பின்னர் நோன்பு திறப்பார்கள். அப்போது பேரிச்சை, பழங்கள், காய்கறிகள் போன்றவை அதிக அளவில் சாப்பிடுவது வழக்கம். இது நமது உடலின் சத்தை நீர்த்துப் போகச் செய்யாமல் பிடித்து வைத்திருக்க உதவும்.நோன்பு காலத்தில் உடலிலிருந்து நீர்ச்சத்தை இழந்து விடாமல் தடுக்க அதிகமான நீரை அருந்துவது வழக்கம். சிலர் தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு இருப்பதும் உண்டு.
விடியற்கால உணவு அதாவது சஹூர்.. விடியற்காலையில் ஆரோக்கியமான உணவுக்குப் பிறகு நோன்பு தொடங்கும். இப்தார் எனப்படும் நோன்பு திறப்பானது மாலையில், சூரியன் மறைவுக்குப் பிறகு தொடங்கும்.
ரம்ஜான் நோன்புக் காலத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல், தானம் கொடுப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்யலாம். நோன்பு காலத்தின்போது, வாக்குவாதம், குறைசொல்வது, கோபப்படுவது, சண்டை போடுவது போன்றவற்றில் ஈடுபடாமல் அமைதியான முறையில் நோன்புக் காலத்தைக் கடக்க வேண்டும்.
விரதம் அல்லது நோன்பு என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானது. பல்வேறு மதங்களிலும் இந்த விரதமானது நடைமுறையில் இருந்து வருவதுதான். நோன்பு காலத்தின்போது நமது உடல் சீராக மாறுகிறது. உடலின் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு உடலும், மனமும் நலமடைகிறது.
நோன்பு இருப்பதன் மூலம் தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் மன வலிமையையும் இது அதிகரிக்கிறது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}