சென்னை : முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி இன்று காலமானார். அவருக்கு வயது 80.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னை தெற்கு தொகுதிகளில் இருந்து அதிக முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு எம்.பி.,யாக இருப்பவர். இவரது மனைவி ரேணுகாதேவி. நீண்ட காலம் காதலித்து இருவரும் மணம் புரிந்தவர்கள். அதன் பிறகு அவரது உறவினரான பொற்கொடியையும் மணந்தார் டி.ஆர்.பாலு.

டி.ஆர்.பாலுவிற்கு 3 மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். டி.ஆர்.பாலு-ரேணுகா தேவி தம்பதியின் மகனான டி.ஆர்.பி.ராஜா, டி.ஆர்.பாலுவின் அரசியல் வாரிசாக அடையாளப்படுத்தப்பட்டு, மன்னார்குடி தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று எம்எல்ஏ.,வாக உள்ளார். இவர் தற்போது அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி, கடந்த 8 மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. மறைந்த ரேணுகா தேவியின் உடலுக்கு திமுக பிரமுகர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ரேணுகா தேவியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}