சென்னை: நடிகை கெளதமி பாஜகவிலிருந்து விலகிய நிலையில் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அவரை தன் பக்கம் இழுத்ததன் பின்னணி குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆந்திராவைப் பூர்வீமாகக் கொண்ட நடிகை கெளதி, தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். குரு சிஷ்யன்தான் அவரது முதல் படம். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கெளதமி பின்னர் அரசியலில் தீவிரமாக இறங்கினார். பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அவர் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட மிகவும் ஆர்வமாக இருந்தார். அந்த்த தொகுதியில் களப் பணியெல்லாம் கூட ஆற்றி வந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் பெரும் ஏமாற்றமடைந்தார். தேர்தலுக்குப் பின்னர் கட்சியில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் பாஜகவை விட்டு விலகினார். அழகப்பன் என்பவர் தன்னிடம் நில மோசடி செய்து விட்டதாகவும், அவருக்கு பாஜக தலைவர்கள் ஆதரவாக இருப்பதாகவும் கூறி அவர் அறிக்கை விட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸிலும் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் தற்போது அழகப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென அதிமுகவில் இணைந்து விட்டார் கெளதமி. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இணைந்தது குறித்து கெளதமி கூறுகையில், நீண்ட காலமாகவே நான் அம்மாவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். அவர் மீது நிறைய மரியாதையும், பாசமும் அன்பும் வைத்துள்ளேன். அதை விளக்க வார்த்தைகள் கிடையாது. அதிமுகவில் இணைந்தது திடீர் திட்டம் என்று சொல்வதை விட இந்த பயணத்தை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் கெளதமி.

தேர்தல் சமயத்தில் கட்சியில் சேர்ந்துள்ளதால் கெளதமி லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அப்படி அவர் ஒருவேளை போட்டியிடுவதாக இருந்தால் விருதுநகர் தொகுதியில் போட்டியிடலாமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. விருதுநகர் தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம் சட்டசபைத் தொகுதியில்தான் அவர் போட்டியிட முன்பு ஆர்வம் காட்டி வந்தார். அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் அவரை நிறுத்த அதிமக முடிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து கெளதமி கூறுகையில், அதையெல்லம் போகப் போகப் பார்க்கலாம் என்று மட்டுமே கூறினார். ஆனால் கெளதமியை வைத்து அதிமுக ஏதாவது பிளான் செய்திருக்கலாம் என்று உறுதியாக நம்பப்படுகிறது. கெளதமி வார்த்தையில் சொல்வதானால், போகப் போகப் பார்க்கலாம்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}