சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியை மீண்டும் கார்த்தி சிதம்பரத்திற்குத் தரக் கூடாது. அவர் தொடர்ந்து ராகுல் காந்தியை விமர்சித்து வருகிறார் என்று சிவகங்கையில் போர்க்குரல் எழுந்துள்ளது.
கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தரக் கூடாது என்று வலியுறுத்தி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானமே போட்டிருப்பதால் சிக்கல் எழுந்துள்ளது.
சிவகங்கை தொகுதியில் ஒரு காலத்தில் ப.சிதம்பரம் தொடர்ந்து போட்டியிட்டு வந்தார். மொத்தம் 7 முறை அந்தத் தொகுதியில் ப.சிதம்பரம் வென்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் 5 முறையும், தமாகா சார்பில் 2 முறையும் இத்தொகுதியில் வென்றுள்ளார் ப.சிதம்பரம். கடந்த 2019 தேர்தலில் இந்த சீட்டில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு வென்றார்.
சிவகங்கை தொகுதியில் 2 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் வென்றுள்ளனர். இது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். இத்தொகுதியில் ப.சிதம்பரத்திற்கு டப் கொடுப்பவராக அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் இருந்து வருகிறார். இவர் 1999ம் ஆண்டு அங்கு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

இந்த நிலையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுப்பதற்கு சுதர்சன நாச்சியப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று சிவகங்கையில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தரக் கூடாது என்று வலியுறுத்தி தீர்மானமும் போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுதர்சன நாச்சியப்பன் கூறுகையில், கார்த்தி சிதம்பரம் கட்சி நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறார். ராகுல் காந்திக்கு எதிராக பேசி வருகிறார். அதை காங்கிரஸார் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருக்கு 2024 லோக்சபா தேர்தலில் சீட் தரக் கூடாது என்று கூறி கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. அவருக்கு சீட் தருவதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறியுள்ளார் சுதர்சன நாச்சியப்பன்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிவகங்கை காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த பூசல் கட்சித் தலைமைக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. அதை விட முக்கியமாக திமுக கவலை அடைந்துள்ளது. இவர்களது உட் கட்சிப் பூசலால் பாஜகவுக்கு லாபம் வந்து விடக் கூடாதே என்பதே திமுகவின் பயமாகும்.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் எச். ராஜா இங்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மீண்டும் அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியினரிடையே உட்கட்சிப் பூசல் வெடித்திருப்பது பாஜகவுக்கு சந்தோஷத்தையும், திமுகவுக்கு சங்கடத்தையும் அளிப்பதாக உள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}