சென்னை: தேமுதிக, அதிமுக கூட்டணிக்கு தான் செல்லும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து விட்டு வந்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இதனால் திமுக பக்கம் செல்ல தேமுதிக தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இது பற்றி பிரேமலதா விஜயகாந்த்திடம் கேட்டதற்கு, "இரண்டு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து கொண்டாலே கூட்டணி தானா? இது மரியதை நிமித்தமான சந்திப்பு. நலம் விசாரிப்பதற்காக தான் முதல்வரை சென்று சந்தித்தேன்" என்றார். அதோடு தேமுதிக மாநில மாநாடு ஜனவரியில் நடத்தப்பட உள்ளதாகவும் அப்போது தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தார் பிரேமலதா. இதனால் மீடியாக்களும் தேமுதிக.,வின் அரசியல் நகர்வுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தேமுதிக, அதிமுக பக்கம் சென்று விடாமல் இருப்பதற்காக தான் திமுக எம்எல்ஏ கதிரவனின் தந்தை சீனிவாசனுக்குச் சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மூலமாக, தேமுதிக.,விற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியில் கல்லூரியை ரூ.150 கோடிக்கு வாங்க ஏற்பாடு செய்யப்பட்டதாம். ஆண்டாள் அழகர் கல்லூரியை விற்பதற்காக பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாக மீடியாக்களில் தகவல் வெளியானது. ஆனால் ஆண்டாள் அழகர் கல்லூரியை வாங்குவதற்காக ரூ.50 கோடி மட்டுமே தேமுதிக.,விற்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். மீதமுள்ள ரூ.100 கோடியை பின்னர் தருவதாக கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆண்டாள் அழகர் கல்லூரியை விற்பதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், கிட்னி முறைகேடு விவகாரத்தில் சிக்கி உள்ளது தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி குழுத்திற்குச் சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம். இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றுள்ளது. தற்போது மதுரை ஐகோர்ட் கிளையில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் தலையிலான பெஞ்ச் கிட்னி முறைகேடு வழக்கை விசாரித்து, கல்லூரி நிர்வாகத்தின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதோடு, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் கோர்ட்டே அமைத்துள்ளது. அது மட்டுமல்ல, உறுப்பு திருட்டு என்பது மிகவும் சீரியசான விவகாரம் என்பதால் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை கோர்ட் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் கூறி உள்ளார்.
கிட்னி முறைகேடு விவகாரத்தில் ஒருவேளை கோர்ட் உத்தரவுப்படி எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் பட்சத்தில், அதில் நிதி முறைகேடு விவகாரமும் உள்ளடங்கும் என்பதால் அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்திற்குள் வரும். அப்படி அமலாக்கத்துறை உள்ளே வந்தால், இந்த வழக்கின் விசாரணை முடிந்து, தீர்ப்பு வரும் வரை தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிக்கு சொந்தமான அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்படும். அப்படி முடக்கப்பட்டால் ஆண்டாள் அழகர் கல்லூரியை வாங்குவது தொடர்பான மீதமுள்ள ரூ.100 கோடியை தேமுதிக.,விற்கு தர முடியாமல் போகும்.
கிட்னி முறைகேடு விவகாரம் பூதாகரமாகி வருவதால் திமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையும் ஆரம்ப கட்டத்துடன் நின்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பிரேமலதா விஜயகாந்த், மீண்டும் அதிமுக கூட்டணிக்கே திரும்பலாமா என்று பரிசீலித்து வருகிறாராம். இதன் காரணமாக தான் தவெக மாநாடு முடிந்ததும், "விஜய் எங்கள் தம்பி" என்றவர், அடுத்த சில நாட்களிலேயே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, "யாராலும் விஜய்காந்த் ஆக முடியாது. அரசியல் ரீதியாக விஜயகாந்த் பெயரை விஜய் பயன்படுத்துவது தவறு" என கண்டனமும் தெரிவித்துள்ளார் என சொல்லப்படுகிறது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}