குடியரசுத் துணைத் தலைவர் பதவி.. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை நிறுத்த பாஜக திட்டம்?

Jul 23, 2025,06:47 PM IST

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை நிறுத்த பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குடியரசுத் துணைத் தலைவராக இருந்து வந்த ஜெகதீப் தன்கர், உடல் நலத்தைக் காரணம் காட்டி பதவி விலகி விட்டார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதனால் விரைவில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.


இந்தப் பதவிக்கு யார் அடுத்து வரப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பாஜக தரப்பில் சர்பிரைஸ் ஒன்றை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த குடியரசுத் துணைத் தலைவராக வாய்ப்புள்ளதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன. 




நிதிஷ் குமார் தலைமையில் NDA கூட்டணி பீகார் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில், இது சாத்தியமில்லாததாக தோன்றலாம். ஆனால், நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து எதிர்கால தலைமுறைக்கு வழிவிட தயாராகி வருவதாக அந்த மாநிலத் தலைவர் உபேந்திர குஷ்வாஹா கூறியிருப்பது இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது.


டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா மற்றும் ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோரின் பெயர்களும் இந்த பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்சேனாவுக்கு "பெரிய பதவி" வழங்கப்படலாம் என்றும், சின்ஹாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைவதால் அவர் இந்த பதவிக்கு சரியான தேர்வாக இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.


ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், ஆளும் அரசாங்கத்தால் நம்பப்படும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்பி ஆவார். இவரது பெயரும் பரிசீலனையில் உள்ளது.  ஆனால் நிதீஷ் குமார் பெயர்தான் பலமாக அடிபடுகிறது. நிதீஷ் குமாரை டெல்லிக்கு வரழைத்து குடியரசுத் துணைத் தலைவராக்கி விட்டு, பீகார் முதல்வர் பதவியை பாஜக எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த டீலுக்கு நிதீஷ் குமார் ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை. 


மறுபக்கம், தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட electoral college-ஐ அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்தவுடன், தேர்தலுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரூ. 95,000த்திற்கு உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு

news

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியா நீங்க.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

news

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!

news

அந்த மழைத் துளிகளின் சத்தம் முழுவதும்...!

news

முழுமை - படைப்பின் நியதி (Perfection is the order of Life)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 28, 2025... இன்று இடமாற்றங்கள் ஏற்படும் நாள்

news

இலங்கை அருகே.. மலைகளுக்கு இடையே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் டித்வா புயல்..!

news

தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

news

நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்