குடியரசுத் துணைத் தலைவர் பதவி.. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை நிறுத்த பாஜக திட்டம்?

Jul 23, 2025,06:47 PM IST

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை நிறுத்த பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குடியரசுத் துணைத் தலைவராக இருந்து வந்த ஜெகதீப் தன்கர், உடல் நலத்தைக் காரணம் காட்டி பதவி விலகி விட்டார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதனால் விரைவில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.


இந்தப் பதவிக்கு யார் அடுத்து வரப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பாஜக தரப்பில் சர்பிரைஸ் ஒன்றை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த குடியரசுத் துணைத் தலைவராக வாய்ப்புள்ளதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன. 




நிதிஷ் குமார் தலைமையில் NDA கூட்டணி பீகார் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில், இது சாத்தியமில்லாததாக தோன்றலாம். ஆனால், நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து எதிர்கால தலைமுறைக்கு வழிவிட தயாராகி வருவதாக அந்த மாநிலத் தலைவர் உபேந்திர குஷ்வாஹா கூறியிருப்பது இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது.


டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா மற்றும் ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோரின் பெயர்களும் இந்த பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்சேனாவுக்கு "பெரிய பதவி" வழங்கப்படலாம் என்றும், சின்ஹாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைவதால் அவர் இந்த பதவிக்கு சரியான தேர்வாக இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.


ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், ஆளும் அரசாங்கத்தால் நம்பப்படும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்பி ஆவார். இவரது பெயரும் பரிசீலனையில் உள்ளது.  ஆனால் நிதீஷ் குமார் பெயர்தான் பலமாக அடிபடுகிறது. நிதீஷ் குமாரை டெல்லிக்கு வரழைத்து குடியரசுத் துணைத் தலைவராக்கி விட்டு, பீகார் முதல்வர் பதவியை பாஜக எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த டீலுக்கு நிதீஷ் குமார் ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை. 


மறுபக்கம், தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட electoral college-ஐ அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்தவுடன், தேர்தலுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

எழுத்தறிவித்த இறைவர்களுக்கு நன்றி பகரும் நன்னாள் இந்நாள்!

news

இடர்பாடுகள்

news

ஆசிரியர் எனும் அகல்விளக்கு!

அதிகம் பார்க்கும் செய்திகள்