சென்னை : தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் அமல்படுத்தவுள்ள தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (SIR ) எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்த்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக நவம்பர் 2ம் தேதி தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு தவெக தலைவர் விஜய்க்கும் திமுக அழைப்பு அனுப்பியுள்ளது.
அனைத்து கட்சிகளுக்கும் முறையாக அழைப்பு அனுப்பிய திமுக, விஜய்யின் தவெக., கட்சியை அழைக்க திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனை நேரில் அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த அழைப்பை ஏற்று, கட்சி தலைவர் என்ற முறையில் விஜய் இந்த கூட்டத்திற்கு செல்வாரா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் உண்மையில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது ஒரு புறம் பாஜக எதிர்ப்பு கூட்டமாக திமுக நடத்தினாலும், மற்றொரு புறம் இது தவெக.,விற்கு வைக்கும் அரசியல் செக் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு தவெக சென்றாலும் அது அரசியல் ஆக்கப்பட்டு, நெருக்கடியை ஏற்படுத்தும். செல்லாவிட்டாலும் நெருக்கடியான நிலையை தான் தவெக.,விற்கு ஏற்படுத்தும். பாஜக.,வை கொள்கை எதிரி என விஜய் ஏற்கனவே பலமுறை கூறி விட்டார். அதனால் அவர்களுடன் கூட்டணி என்பது கிடையவே கிடையாது என கரூர் சம்பவத்திற்கு முன்பு வரை பேசிய அனைத்து பிரச்சார கூட்டங்களிலும் கூறி உள்ளார் விஜய். அப்படி பார்த்தால், பாஜக.,விற்கு எதிராக திமுக கூட்டி உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்கலாம்.

ஆனால் கரூர் சம்பவ விவகாரத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தவெக தான் இந்த பொறுப்பு, விஜய் தான் குற்றவாளி என குற்றம்சாட்டிக் கொண்டிருந்த போது, தவெக.,வை அந்த இக்கட்டான சிக்கலில் இருந்து வெளியே வருவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அரசின் கவனக்குறைவு தான் காரணம் என மற்றொரு கோணத்தில் இந்த விவகாரத்தை கையாண்டு, தவெக.,விற்கு ஆதரவாக பேசியது பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் தான்.
இதை மனதில் வைத்து, ஒருவேளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு செல்லாமல் விஜய் புறக்கணித்தால், பாஜக உடன் கூட்டணி வைக்க விஜய் முடிவு செய்து விட்டார். பாஜக.,வின் பி டீம் தான் விஜய். அதனால் தான் பாஜக.,விற்கு எதிராக செயல்பட மனமில்லாமல் அனைத்துக் கட்சி கூட்டத்தை தவெக புறக்கணித்தது என்ற விமர்சனங்களை திமுக உள்ளிட்ட கட்சிகள் முன் வைக்கும். ஒருவேளை அனைத்துக் கட்சி கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டால், ஆதவ் அர்ஜூனா மூலமாக திமுக.,வுடன் தவெக ரகசிய உறவு வைத்துள்ளதாக சொல்லப்படும் விமர்சனங்கள் மீண்டும் முன் வைக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள விஜய்யே நேரடியாக வந்தால் முதல்வரை அவர் முதல் முறையாக நேரில் சந்திக்கும் வகையில் அது அமையும். அதேசமயம், செய்தியாளர்களையும் சந்திக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு நேரலாம். அவர்களை சமாளிப்பது ஒரு சவாலானது என்பதால் விஜய் நேரடியாக பங்கேற்க மாட்டார் என்றும் அவருக்குப் பதில் புஸ்ஸி ஆனந்த் அல்லது ஆதவ் அர்ஜூனா போன்றோரை அனுப்பி வைக்கலாம் என்று கருதப்படுகிறது.
அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டாலும், கலந்து கொள்ள விட்டாலும் தவெக மீது அரசியல் விமர்சனங்கள் முன் வைக்கப்படும் என்பதால் இந்த சவாலை விஜய் எப்படி கையாள போகிறார்? என்பதை பார்க்க தமிழக அரசியல் களம் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக, பாஜக தவிர்த்து 64 கட்சிகளின் தலைவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. பாமகவைப் பொறுத்தவரை டாக்டர் ராமதாஸுக்கே அழைப்பு போயுள்ளது. டாக்டர் அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
 
                                                                            கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
 
                                                                            இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}