சென்னை: முதல்வரின் அமெரிக்க பயணம் காரணமாக, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாக ஒரு தகவல் கிளம்பியுள்ளது.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்ற பேச்சு இப்போது நேற்று அல்ல, பல மாதங்களாகவே அவ்வப்போது கிளம்பி வந்து கொண்டுதான் உள்ளது. சேலத்தில் கடந்த ஜனவரி 21ல் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடந்தபோது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது, துணை முதல்வர் பதவி என்பது வதந்தி என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, முதல்வருக்கு துணையாக எல்லா அமைச்சர்களும் இருக்கப்போகிறோம் என்றும், எனக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார் என்றும் உதயநிதி தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த வதந்தி கிளம்பியுள்ளது.

ஜூலை 10ம் தேதி நடக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன் இம்மாத இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளார். முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்து சட்டமன்றத்தில் டிஆர்பி ராஜா ஏற்கனவே கூறியிருந்தார். அப்போது அவர் கூறுகையில்,"தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அடுத்தமாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்களை சந்திக்க அவர் அமெரிக்கா செல்கிறார்" என்று கூறியிருந்தார்.
பல சந்தர்பங்களில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று வதந்திகள் கிளம்பி வந்த நிலையில் தற்போது மீண்டும் இது வெடித்துக் கிளம்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் அதிக நாட்கள் தங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தால், முதல்வர் பொறுப்பை யாரிடமாவது ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டியிருக்கும். எனவே அதற்கு வசதியாக, உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க திட்டமிடடப்படுவதாக இப்போதைய செய்திகள் கூறுகின்றன.
இந்த முறையும் இது வதந்தியாக இருக்குமா அல்லது நிஜமாகவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}