நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கார் கதவை சற்றும் யோசிக்காமல், பட்டென்று திறந்து விட்டார் ஒரு பெண் டாக்டர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் காரர் கார் கதவு மீது மோதி கீழே விழுந்து அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்து போனார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் சித்ரா. இவர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி காரை தெருவின் ஒரமாக நிறுத்தி விட்டு, அக்கம் பக்கம் உள்ள எதையும் கவனிக்காமல் சட்டென்று கார் கதவை திறந்துள்ளார். கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல் கதவைத் திறந்து விட்டார் டாக்டர் சித்ரா.
அப்போது பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால், எதிர் பாராத விதமாகபைக்கை ஓட்டி வந்த சரவணன் கார் கதவு மீது மோதி தூக்கி வீசப்பட்டார். சம்பவத்தை பார்த்து அதிர்ந்து போன அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து சரவணனை மீட்டனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சரவணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறினர்.
இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்த போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். சிசிடிவி பூட்டேஜைப் பார்த்ததில், சித்ராவின் அலட்சியமும், அஜாக்கிரதையுமே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் பதிவான சிசி டிவி பூட்டேஜ் தற்பொழுது சமூக வளைதலங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெண் டாக்டரின் அஜாக்கிரதையால் ஒரு அப்பாவி உயிர் பறி போனது வேதனையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}