நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கார் கதவை சற்றும் யோசிக்காமல், பட்டென்று திறந்து விட்டார் ஒரு பெண் டாக்டர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் காரர் கார் கதவு மீது மோதி கீழே விழுந்து அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்து போனார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் சித்ரா. இவர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி காரை தெருவின் ஒரமாக நிறுத்தி விட்டு, அக்கம் பக்கம் உள்ள எதையும் கவனிக்காமல் சட்டென்று கார் கதவை திறந்துள்ளார். கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல் கதவைத் திறந்து விட்டார் டாக்டர் சித்ரா.
அப்போது பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால், எதிர் பாராத விதமாகபைக்கை ஓட்டி வந்த சரவணன் கார் கதவு மீது மோதி தூக்கி வீசப்பட்டார். சம்பவத்தை பார்த்து அதிர்ந்து போன அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து சரவணனை மீட்டனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சரவணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறினர்.
இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்த போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். சிசிடிவி பூட்டேஜைப் பார்த்ததில், சித்ராவின் அலட்சியமும், அஜாக்கிரதையுமே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் பதிவான சிசி டிவி பூட்டேஜ் தற்பொழுது சமூக வளைதலங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெண் டாக்டரின் அஜாக்கிரதையால் ஒரு அப்பாவி உயிர் பறி போனது வேதனையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}