சின்ன சின்ன பூனை.. செல்லமான பூனை.. கருப்பு வெள்ளை கலரில் அசத்தும் கலக்கலான பூனை!

Aug 08, 2024,04:32 PM IST
புதுடெல்லி: இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி சர்வதேச பூனைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. பூனையைப் பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு க்யூட்டான விலங்குதான் இந்த பூனைகள்.

பூனைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றை பாதுகாப்பதன் அவசியத்தை பிரதிபலிக்கவும்  சர்வதேச பூனைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பூனைகளின் இனத்தை பாதுகாக்கும் விதமாக சர்வதேச பூனைகள் தினம் கொண்டாடப்படுவதாக 2002 ஆம் ஆண்டு விலங்குகள் நல வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் எட்டாம் தேதி சர்வதேச பூனைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.



இந்தியாவில் பூனைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நீண்ட காலமாக ஒரு உறவு உண்டு. அது என்னவென்றால்  பூனைகளின் பொசு பொசு பொசு  உடல் அமைப்பு, அதன் கண்கள், சிறுத்தையைப் போன்ற முகத்தோற்றம் என இது அனைத்தையும் கவர்ந்தவர்கள் சிலர். ஒரு சிலரோ நாம் வெளியே கிளம்பும் போது பூனை இடதுபுறமாக சென்றால் அது நல்ல சகுனமென்றும், வலது புறமாக சென்றால் அது கெட்ட சகுனம் என்றும் மக்களிடத்தில் நீங்கா நம்பிக்கைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக பூனை குறுக்கே வந்தால் சகுன தடையாகவும் எண்ணுகின்றனர்.

இப்படியாக பூனைகளுக்கும் மனிதர்களுக்கும் மற்றும் இடையே பழங்காலம் முதல் தற்போது வரை பிரிக்க முடியாத உறவு நீடித்தது வருகிறது. ஆனாலும் பூனைகளைப் போல அருமையான விலங்கு வேற எதுவுமே கிடையாதுங்க. இதனால்தான் பலர் பூனைகளை செல்ல பிராணிகளாகவே வளர்த்தும் வருகின்றனர்.

சரி அதை விடுங்க.. பூனைகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக!





உலகம் முழுவதும் 40 வகையான பூனை இனங்கள் உள்ளன. அதில் 8 வகைகள் மட்டுமே இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.

பூனைகள் 100க்கும் மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக் கூடிய திறன் கொண்டது. பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும்.

 பூனைகள் இருட்டில் நன்றாக பார்க்கும் திறன் கொண்டவை. அதனால் அதன் கண்கள்பார்வை மிகவும் கூர்மையாக இருக்கும். 

பூனையும் மிகவும் சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும் பகுதியை உடலின் மேற்பகுதியை  நாக்கால் நக்கி சுத்தம் செய்வதில் செலவிடுமாம். 

ஒரு பூனை தமது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை போடும். 

மனிதர்களின் கைரேகை இருப்பது போலவே பூனைகளுக்கு மூக்கு ரேகைகள் இருக்குமாம்.

 மனிதனுக்கு பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக் கூடிய திறன் கொண்டது.

பூனைகளின் உள்ளங்கால்கள் வழியாக வியர்வை வெளியேற்றும்.

 32 மாடிகள் உயரத்திலிருந்து விழுந்தாலும் பூனைகள் உயிர்பிழைத்து விடும்.

 பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விட 14 மடங்கு அதிகம்.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்