பாகு, அஜர்பைஜான்: உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரின் முதல் சுற்றை வென்று, 2வது சுற்றை டிரா செய்ததால், நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் ஆனார். உலகின் முதல் நிலை வீரரான அவர் உலக சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
18 வயதேயான இந்தியாவின் பிரக்ஞானந்தா, கார்ல்சனுக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். இறுதிப் போட்டியின் இரு சுற்றுக்களையும் டிராவில் முடித்தார். இதனால் போட்டி டை பிரேக்கருக்குப் போனது. டை பிரேக்கரில் இரு சுற்றுக்களிலும் கார்ல்சன் அதிரடியாக ஆடியதால் சாம்பியன் பட்டம் அவருக்குப் போய் விட்டது.
இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா வென்றிருந்தால் இரண்டு சாதனைகளை அவர் படைத்திருக்க முடியும். மிகவும் இளம் வயது சாம்பியன் மற்றும் அவருக்கு இது முதல் பட்டம் என்ற சாதனையே அவை. அவை தற்போது கைநழுவி போய் விட்டன. ஆனால் செஸ் உலகை தனது திறமையான ஆட்டத்தால் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார் பிரக்ஞானந்தா.
செஸ் தரவரிசையில் 2 மற்றும் 3வது நிலையில் உள்ள வீரர்களை வீழ்த்தித்தான் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அங்கும் கூட முதல் நிலை வீரரான கார்ல்சனை ரெகுலர் சுற்றுக்களில் திணறடித்து விட்டார். டை பிரேக்கரின் முதல் சுற்றிலும் கூட கார்ல்சன் போராடித்தான் வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}