பாகு, அஜர்பைஜான்: உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரின் முதல் சுற்றை வென்று, 2வது சுற்றை டிரா செய்ததால், நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் ஆனார். உலகின் முதல் நிலை வீரரான அவர் உலக சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
18 வயதேயான இந்தியாவின் பிரக்ஞானந்தா, கார்ல்சனுக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். இறுதிப் போட்டியின் இரு சுற்றுக்களையும் டிராவில் முடித்தார். இதனால் போட்டி டை பிரேக்கருக்குப் போனது. டை பிரேக்கரில் இரு சுற்றுக்களிலும் கார்ல்சன் அதிரடியாக ஆடியதால் சாம்பியன் பட்டம் அவருக்குப் போய் விட்டது.
இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா வென்றிருந்தால் இரண்டு சாதனைகளை அவர் படைத்திருக்க முடியும். மிகவும் இளம் வயது சாம்பியன் மற்றும் அவருக்கு இது முதல் பட்டம் என்ற சாதனையே அவை. அவை தற்போது கைநழுவி போய் விட்டன. ஆனால் செஸ் உலகை தனது திறமையான ஆட்டத்தால் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார் பிரக்ஞானந்தா.
செஸ் தரவரிசையில் 2 மற்றும் 3வது நிலையில் உள்ள வீரர்களை வீழ்த்தித்தான் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அங்கும் கூட முதல் நிலை வீரரான கார்ல்சனை ரெகுலர் சுற்றுக்களில் திணறடித்து விட்டார். டை பிரேக்கரின் முதல் சுற்றிலும் கூட கார்ல்சன் போராடித்தான் வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
{{comments.comment}}