பாகு, அஜர்பைஜான்: உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரின் முதல் சுற்றை வென்று, 2வது சுற்றை டிரா செய்ததால், நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் ஆனார். உலகின் முதல் நிலை வீரரான அவர் உலக சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
18 வயதேயான இந்தியாவின் பிரக்ஞானந்தா, கார்ல்சனுக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். இறுதிப் போட்டியின் இரு சுற்றுக்களையும் டிராவில் முடித்தார். இதனால் போட்டி டை பிரேக்கருக்குப் போனது. டை பிரேக்கரில் இரு சுற்றுக்களிலும் கார்ல்சன் அதிரடியாக ஆடியதால் சாம்பியன் பட்டம் அவருக்குப் போய் விட்டது.
இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா வென்றிருந்தால் இரண்டு சாதனைகளை அவர் படைத்திருக்க முடியும். மிகவும் இளம் வயது சாம்பியன் மற்றும் அவருக்கு இது முதல் பட்டம் என்ற சாதனையே அவை. அவை தற்போது கைநழுவி போய் விட்டன. ஆனால் செஸ் உலகை தனது திறமையான ஆட்டத்தால் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார் பிரக்ஞானந்தா.
செஸ் தரவரிசையில் 2 மற்றும் 3வது நிலையில் உள்ள வீரர்களை வீழ்த்தித்தான் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அங்கும் கூட முதல் நிலை வீரரான கார்ல்சனை ரெகுலர் சுற்றுக்களில் திணறடித்து விட்டார். டை பிரேக்கரின் முதல் சுற்றிலும் கூட கார்ல்சன் போராடித்தான் வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}