பாகு, அஜர்பைஜான்: உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரின் முதல் சுற்றை வென்று, 2வது சுற்றை டிரா செய்ததால், நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் ஆனார். உலகின் முதல் நிலை வீரரான அவர் உலக சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
18 வயதேயான இந்தியாவின் பிரக்ஞானந்தா, கார்ல்சனுக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். இறுதிப் போட்டியின் இரு சுற்றுக்களையும் டிராவில் முடித்தார். இதனால் போட்டி டை பிரேக்கருக்குப் போனது. டை பிரேக்கரில் இரு சுற்றுக்களிலும் கார்ல்சன் அதிரடியாக ஆடியதால் சாம்பியன் பட்டம் அவருக்குப் போய் விட்டது.
இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா வென்றிருந்தால் இரண்டு சாதனைகளை அவர் படைத்திருக்க முடியும். மிகவும் இளம் வயது சாம்பியன் மற்றும் அவருக்கு இது முதல் பட்டம் என்ற சாதனையே அவை. அவை தற்போது கைநழுவி போய் விட்டன. ஆனால் செஸ் உலகை தனது திறமையான ஆட்டத்தால் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார் பிரக்ஞானந்தா.
செஸ் தரவரிசையில் 2 மற்றும் 3வது நிலையில் உள்ள வீரர்களை வீழ்த்தித்தான் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அங்கும் கூட முதல் நிலை வீரரான கார்ல்சனை ரெகுலர் சுற்றுக்களில் திணறடித்து விட்டார். டை பிரேக்கரின் முதல் சுற்றிலும் கூட கார்ல்சன் போராடித்தான் வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}