சென்னை: வேளச்சேரி, செம்மஞ்சேரி என இருப்பதைப் போல் சேரி எனக் கூறினேன், அதில் தவறு இல்லை என நடிகை குஷ்பு கொடுத்துள்ள விளக்கத்துக்கு திமுகவைச் சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பதிலடியாக ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான திரிஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு. அப்போது சிலரை போல என்னால் சேரி மொழியில் பேச இயலாது என பதிவிட்டிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நேற்று குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் அந்த மாதிரி பேசவே இல்ல, நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கவர்மெண்ட் ரெக்கார்டுலயே சேரி என்ற வார்த்தை இருக்கிறது. வேளச்சேரி இருக்கு.. அதுக்கு என்னங்க அர்த்தம்.. செம்மஞ்சேரினு இருக்கு.. அதுக்கு என்ன அர்த்தம் என்னங்க கேக்குறேன்.. நீங்க எல்லாரும் தமிழ் தெரிஞ்சவங்க தானே.. சேரிக்கு என்ன அர்த்தம்? நீங்க எனக்கு விளக்கம் கொடுங்க.. அந்த வார்த்தையால தானே பிரச்சனை வருது.. எனக்கு தமிழ் தெரியாதுன்னு வச்சுக்கோங்க.. நீங்க எனக்கு விளக்கம் சொல்லுங்க என செய்தியாளர்களை நோக்கி கேட்டார்.
ஏற்கனவே குஷ்பு சேரி என்ற வார்தைக்கு பிரெஞ்ச் மொழியில் அன்பு என்று பொருள்படும் என்றும் வித்தியாசமான விளக்கத்தை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உண்மையில் குஷ்பு, சேரி என்று சொன்னதற்காக யாரும் அவரை விமர்சிக்கவில்லை.. "சேரியில் பேசும் பாஷைக்கெல்லாம்" பதிலளிக்க முடியாது என்பது அந்த சேரி வாழ் மக்களின் மொழியைக் கொச்சைப்படுத்துவது போல உள்ளது என்பதுதான் குற்றச்சாட்டு.. அந்தக் குற்றச்சாட்டு குஷ்புவுக்குப் புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை.
இந்த நிலையில் குஷ்புவின் தமிழ் ஆராய்ச்சியை நக்கலடித்துள்ளார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன். இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் போட்ட பதிவில், ஒருவரை குண்டு என்று பாடிஷேமிங் பண்ணினால், வத்தலகுண்டு மாதிரிதான் இதுவும் என்று சொல்லலாமா? மொழி ஆராய்ச்சியில் மகுடேஸ்வரனுக்கே டஃப் கொடுக்கிறாங்க என்று கூறியுள்ளார் மனுஷ்யபுத்திரன்.
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}