இடி மேல் இடி.. டெல்லி கணேஷ், எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மறைவு.. எழுத்தாளர் ராஜேஷ் குமார் வேதனை

Nov 10, 2024,04:47 PM IST

சென்னை: தமிழ்ப் படைப்புலகம் அடுத்தடுத்து இரு பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது. நேற்று நடிகர் டெல்லி கணேஷ் காலமான துயரத்தில் மக்கள் இருக்கும்போது இன்று இன்னொரு துயரமாக எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜனை எழுத்துலகம் பறி கொடுத்துள்ளது.


பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு காலமானார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. இன்று நடிக்கப் போக வேண்டும் என்று சொல்லி விட்டுத்தான், வீட்டில் உள்ளோரிடம் வழக்கம் போல சகஜமாக பேசியிருந்து விட்டுத்தான் தூங்கப் போனார் டெல்லி கணேஷ். ஆனால் தூக்கத்திலேயே அவர் மீளாத் துயலில் ஆழ்ந்துள்ளார்.


இந்த சோகத்தின் வலி இன்னும் போகாத நிலையில் இன்று எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மதுரையில் மறைந்துள்ளார். அவரது மறைவு எழுத்துலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்திரா செளந்தரராஜன். மிகவும் எளிமையான மனிதர், நல்ல மனித நேயர், அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அவரது மறைவு எழுத்தாளர்களையும், அவரது வாசகர்களையும் மட்டுமல்லாமல் தமிழ் கூறும் நல்லுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




இருவரது மறைவுக்கும் பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் டெல்லி கணேஷ் குறித்த எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதியுள்ள இரங்கல் குறிப்பு:


ஒரே ஒரு முறை 

டெல்லி கணேஷ் அவர்களை  10 வருடங்களுக்கு முன்பு 

பொள்ளாச்சியில் நடந்த 

சண்டமாருதம் படப்பிடிப்பில்

சந்தித்தேன்.

நான் அங்கே இருந்த 12 மணி நேரத்தில் 

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் 

என்னோடு மட்டுமே 

பேசிக் கொண்டு இருந்தார்.

சிரிக்க சிரிக்க 

பேசினார். 

எழுத்தாளர்களின் மேல் 

அவருக்கு அலாதிப் பிரியம்

பார்த்தது ஒரு முறைதான்.

ஆனால் 

பல வருடங்கள் 

பழகியது போன்ற உணர்வு.

அவருடைய ஆன்மா 

இறைவனின் 

நிழலில் 

நிம்மதி பெறட்டும்.


பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் .. மதுரையில் காலமானார்


எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் குறித்து ராஜேஷ் குமார் எழுதிய இரங்கல்:


இடி

மேல் 

இடி..

அருமை நண்பர் 

எழுத்தாளர் 

இந்திரா செளந்தரராஜன் 

மறைவு.

தாங்கிக் கொள்ள 

இதயம் 

மறுக்கிறது.

கண்ணீருடன்

நெஞ்சார்ந்த 

ஆழ்ந்த 

அஞ்சலி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்