இடி மேல் இடி.. டெல்லி கணேஷ், எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மறைவு.. எழுத்தாளர் ராஜேஷ் குமார் வேதனை

Nov 10, 2024,04:47 PM IST

சென்னை: தமிழ்ப் படைப்புலகம் அடுத்தடுத்து இரு பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது. நேற்று நடிகர் டெல்லி கணேஷ் காலமான துயரத்தில் மக்கள் இருக்கும்போது இன்று இன்னொரு துயரமாக எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜனை எழுத்துலகம் பறி கொடுத்துள்ளது.


பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு காலமானார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. இன்று நடிக்கப் போக வேண்டும் என்று சொல்லி விட்டுத்தான், வீட்டில் உள்ளோரிடம் வழக்கம் போல சகஜமாக பேசியிருந்து விட்டுத்தான் தூங்கப் போனார் டெல்லி கணேஷ். ஆனால் தூக்கத்திலேயே அவர் மீளாத் துயலில் ஆழ்ந்துள்ளார்.


இந்த சோகத்தின் வலி இன்னும் போகாத நிலையில் இன்று எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மதுரையில் மறைந்துள்ளார். அவரது மறைவு எழுத்துலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்திரா செளந்தரராஜன். மிகவும் எளிமையான மனிதர், நல்ல மனித நேயர், அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அவரது மறைவு எழுத்தாளர்களையும், அவரது வாசகர்களையும் மட்டுமல்லாமல் தமிழ் கூறும் நல்லுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




இருவரது மறைவுக்கும் பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் டெல்லி கணேஷ் குறித்த எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதியுள்ள இரங்கல் குறிப்பு:


ஒரே ஒரு முறை 

டெல்லி கணேஷ் அவர்களை  10 வருடங்களுக்கு முன்பு 

பொள்ளாச்சியில் நடந்த 

சண்டமாருதம் படப்பிடிப்பில்

சந்தித்தேன்.

நான் அங்கே இருந்த 12 மணி நேரத்தில் 

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் 

என்னோடு மட்டுமே 

பேசிக் கொண்டு இருந்தார்.

சிரிக்க சிரிக்க 

பேசினார். 

எழுத்தாளர்களின் மேல் 

அவருக்கு அலாதிப் பிரியம்

பார்த்தது ஒரு முறைதான்.

ஆனால் 

பல வருடங்கள் 

பழகியது போன்ற உணர்வு.

அவருடைய ஆன்மா 

இறைவனின் 

நிழலில் 

நிம்மதி பெறட்டும்.


பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் .. மதுரையில் காலமானார்


எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் குறித்து ராஜேஷ் குமார் எழுதிய இரங்கல்:


இடி

மேல் 

இடி..

அருமை நண்பர் 

எழுத்தாளர் 

இந்திரா செளந்தரராஜன் 

மறைவு.

தாங்கிக் கொள்ள 

இதயம் 

மறுக்கிறது.

கண்ணீருடன்

நெஞ்சார்ந்த 

ஆழ்ந்த 

அஞ்சலி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்: ஏறிய வேகத்தில் இறங்கியது தங்கம் விலை!

news

இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!

news

அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!

news

Bharat Bandh: நாடு முழுவதும் 25 கோடித் தொழிலாளர்கள் ஸ்டிரைக்.. முடங்கும் முக்கிய சேவைகள்!

news

காமத் தீயில் வெந்து போனது காமுகனின் மனசு.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

2 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 09, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

news

அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி

news

வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, மக்களையும் ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி!

அதிகம் பார்க்கும் செய்திகள்