சென்னை: தமிழ்ப் படைப்புலகம் அடுத்தடுத்து இரு பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது. நேற்று நடிகர் டெல்லி கணேஷ் காலமான துயரத்தில் மக்கள் இருக்கும்போது இன்று இன்னொரு துயரமாக எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜனை எழுத்துலகம் பறி கொடுத்துள்ளது.
பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு காலமானார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. இன்று நடிக்கப் போக வேண்டும் என்று சொல்லி விட்டுத்தான், வீட்டில் உள்ளோரிடம் வழக்கம் போல சகஜமாக பேசியிருந்து விட்டுத்தான் தூங்கப் போனார் டெல்லி கணேஷ். ஆனால் தூக்கத்திலேயே அவர் மீளாத் துயலில் ஆழ்ந்துள்ளார்.
இந்த சோகத்தின் வலி இன்னும் போகாத நிலையில் இன்று எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மதுரையில் மறைந்துள்ளார். அவரது மறைவு எழுத்துலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்திரா செளந்தரராஜன். மிகவும் எளிமையான மனிதர், நல்ல மனித நேயர், அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அவரது மறைவு எழுத்தாளர்களையும், அவரது வாசகர்களையும் மட்டுமல்லாமல் தமிழ் கூறும் நல்லுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருவரது மறைவுக்கும் பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் டெல்லி கணேஷ் குறித்த எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதியுள்ள இரங்கல் குறிப்பு:
ஒரே ஒரு முறை
டெல்லி கணேஷ் அவர்களை 10 வருடங்களுக்கு முன்பு
பொள்ளாச்சியில் நடந்த
சண்டமாருதம் படப்பிடிப்பில்
சந்தித்தேன்.
நான் அங்கே இருந்த 12 மணி நேரத்தில்
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில்
என்னோடு மட்டுமே
பேசிக் கொண்டு இருந்தார்.
சிரிக்க சிரிக்க
பேசினார்.
எழுத்தாளர்களின் மேல்
அவருக்கு அலாதிப் பிரியம்
பார்த்தது ஒரு முறைதான்.
ஆனால்
பல வருடங்கள்
பழகியது போன்ற உணர்வு.
அவருடைய ஆன்மா
இறைவனின்
நிழலில்
நிம்மதி பெறட்டும்.
பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் .. மதுரையில் காலமானார்
எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் குறித்து ராஜேஷ் குமார் எழுதிய இரங்கல்:
இடி
மேல்
இடி..
அருமை நண்பர்
எழுத்தாளர்
இந்திரா செளந்தரராஜன்
மறைவு.
தாங்கிக் கொள்ள
இதயம்
மறுக்கிறது.
கண்ணீருடன்
நெஞ்சார்ந்த
ஆழ்ந்த
அஞ்சலி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}