இரட்டை சதங்களை அடித்து.. 209ரன்களை குவித்த.. யஷ்ஸ்வி ஜெயஸ்வால்.. சூப்பர் ரெக்கார்ட்!

Feb 03, 2024,03:14 PM IST

விசாகப்பட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து 209 ரன்களை குவித்து சில புதிய சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.


இந்தியா இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.


நேற்று முதல் நாள் ஆட்ட முடிவில் ஜெய்ஸ்வால் 179 ரன்கள் மற்றும் அஸ்வின் 5 ரன்கள் உடன் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று இந்தியா தொடர்ந்தது. அஸ்வின் 20 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் மறு முனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து ரன்களைக் குவித்தார். ஜெய்ஸ்வால் 18 பவுண்டரி, 7 சிக்ஸர்கள்  என மொத்தம் 209 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  இறுதியில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓவர்களில் 396 ரன்கள் எடுத்தது.




தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் நான்கு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.


மிகக் குறைந்த வயதில், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் எடுத்த 3வது இந்திய வீரர் ஜெய்ஸ்வால். ஜெய்ஸ்வாலுக்கு தற்போது 22 வயது 37 நாட்களாகிறது. இதற்கு முன்பு வினோத் காம்ப்ளி தனது 21 வயது 277 நாட்கலில் 1993ம் ஆண்டு இரட்டை சதம் போட்டிருந்தார். அதுவும் அவர் 22 வயதைத் தொடுவதற்கு முன்பு 2 இரட்டை சதம் போட்ட சாதனையாளர் ஆவார்.


இதற்கு அடுத்த இடத்தில் சுனில் கவாஸ்கர் உள்ளார். இவர் 1971ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக இரட்டை சதம் போட்டபோது அவரது வயது 21 வருடம் 277 நாட்கள்தான்.


ஜெய்ஸ்வால் இன்று இன்னொரு சாதனையும் படைத்தார். டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அதிக சிக்சர்கள் அடித்த 3வது வீரராக அவர் உருவெடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 7 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்