- க.யாஸ்மின் சிராஜூதீன்
சதா உழைத்து
சதம் அடிப்போம்
சதி வென்று
இலக்கு அடைவோம்
சதம் என்பது இலக்கு என்றால்
ஆயிரம் சதம் கவனம்
அதன்மேல் வேண்டும் உனக்கு....
கவனம் சதம் என்றால்
தடையெல்லாம் வெற்றியின் படிகள்தான் தோழா....
கண்ணும் கருத்துமாக இருந்தால்
வெற்றிக்கோப்பை உனக்கே உனக்கு...

பதறாத காரியம் சிதறாது....
சிந்தையில் கவனம் சதம் என்றால்
வாழ்கையில் சதம் அடித்து
தங்கத்தேரில் உலாவருவாய்
பார் போற்ற சிகரம் தொடுவாய்.
உழைப்பின் வியர்வை
வெற்றியின் மணமாகும்,
நம்பிக்கை தீபம்
நாளெல்லாம் ஒளி தரும்.
நேர்மை நெஞ்சில்
நிலையாய் குடியிருந்தால்,
விழிகள் முன்னே
விழிப்பு இருந்தால்,
விதியும் வணங்கும்—
வெற்றி உன் பெயர் சொல்லும்.
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை
TVK Govt.. இது விஜய் மாடல் அரசு.. சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம்!
எம்எல்ஏ.,க்களுக்கான பயிற்சி முகாம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!
தீதறு தெளிவு கொள்.. செய்வது துணிந்து செய்.. நிறத்தால் அல்ல நெஞ்சால் வாழ்க!
{{comments.comment}}