- க.யாஸ்மின் சிராஜூதீன்
சதா உழைத்து
சதம் அடிப்போம்
சதி வென்று
இலக்கு அடைவோம்
சதம் என்பது இலக்கு என்றால்
ஆயிரம் சதம் கவனம்
அதன்மேல் வேண்டும் உனக்கு....
கவனம் சதம் என்றால்
தடையெல்லாம் வெற்றியின் படிகள்தான் தோழா....
கண்ணும் கருத்துமாக இருந்தால்
வெற்றிக்கோப்பை உனக்கே உனக்கு...

பதறாத காரியம் சிதறாது....
சிந்தையில் கவனம் சதம் என்றால்
வாழ்கையில் சதம் அடித்து
தங்கத்தேரில் உலாவருவாய்
பார் போற்ற சிகரம் தொடுவாய்.
உழைப்பின் வியர்வை
வெற்றியின் மணமாகும்,
நம்பிக்கை தீபம்
நாளெல்லாம் ஒளி தரும்.
நேர்மை நெஞ்சில்
நிலையாய் குடியிருந்தால்,
விழிகள் முன்னே
விழிப்பு இருந்தால்,
விதியும் வணங்கும்—
வெற்றி உன் பெயர் சொல்லும்.
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தாய்ப் பிரிவின் ஏக்கம்
திருவதிகை விரட்டாணம் சன்னதியில் உருவான திருநாவுக்கரசர்!
இன்பத் தமிழே என் இயக்கம் நீயே
சிந்தனைச் சிதறல்.. சுமை என நினைக்கையில் சுகத்தினைத் தொலைக்கிறோம்!
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
மாற்றுத்திறனாளிகள்..கட்டணச்சலுகைஇல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்
{{comments.comment}}