சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தவிர தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மே 12ஆம் தேதி 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் நிலவும் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் இருந்து, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று தணிந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும், ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று கனமழை நிலவரம்:
நெல்லை, தர்மபுரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 12 கனமழை நிலவரம்:
கோவை,திண்டுக்கல், தேனி,விருதுநகர், நெல்லை, குமரி தென்காசி, ஏழு மாவட்டங்களில் கன மழை எதிர்பார்க்கலாம்.
இது தவிர நாளை (10), நாளை மறுநாள் (11), மே 13 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
வெயில் நிலவரம்:
இன்று முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். அப்போது இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும். சென்னையைப் பொறுத்தவரை சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். 100 டிகிரிக்கும் குறைவாக வெயில் பதிவாகும்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}