சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தவிர தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மே 12ஆம் தேதி 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் நிலவும் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் இருந்து, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று தணிந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும், ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று கனமழை நிலவரம்:
நெல்லை, தர்மபுரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 12 கனமழை நிலவரம்:
கோவை,திண்டுக்கல், தேனி,விருதுநகர், நெல்லை, குமரி தென்காசி, ஏழு மாவட்டங்களில் கன மழை எதிர்பார்க்கலாம்.
இது தவிர நாளை (10), நாளை மறுநாள் (11), மே 13 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
வெயில் நிலவரம்:
இன்று முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். அப்போது இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும். சென்னையைப் பொறுத்தவரை சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். 100 டிகிரிக்கும் குறைவாக வெயில் பதிவாகும்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}