- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை
உன்னால் என்ன முடியும் என்று
உனக்கே தெரியாது
உன் சக்தியை நீயும் புரிந்து கொண்டால்
சாதிக்க தடை ஏது
முயற்சிகள் செய்து தோற்பது எல்லாம்
தோல்விகள் கிடையாது
விழுந்து விடாமல் யாரும் இங்கே
எழுந்தது கிடையாது

இல்லை என்ற சொல்லை கூட
இன்றே தூக்கி போடு
நாளை உன்னை மேலே ஏற்றும்
துணிச்சலுக்குப் போராடு...
வீழ்ந்தால் கூட பந்தாய் மாறி
வேகம் கொண்டு மேலே ஏறு
முந்திக் கொண்டு முன்னால் ஓடு
முயற்சியுடன் போராடு
தாயின் கருவில் கலையாது சிசுவாய் பிறந்தாயே
தாங்கும் உலகில் மனிதா நீயும் அதில் ஜெயித்தாயே
முதலில் உன்னை நம்பு
உன்னால் எதையும் சாதிக்க முடியும்
சோம்பலை சாம்பலாக்கி ஒழுக்கத்தை உணர்வாக்கிடு
உழைப்பை உடைமையாக்கி சிரிப்பை மூலதனம் ஆக்கிடு..
முதலில் வெற்றி கிட்டும் வரை போராடு
முடிவில் அந்த வெற்றியே உனக்கு விழா எடுக்கும்
(கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை, ஈரோட்டைச் சேர்ந்தவர். அக்குபங்சர் மருத்துவர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளர்)
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}