சென்னை: தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில், இன்று இர்ஃபானிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு உணவகங்களுக்குச் சென்று உணவுகளை சுவைத்து அதனை வீடியோவாக யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் இர்ஃபான். இவருக்கு யூடியூபில் லட்சக்கணக்கான பாலோயர்கள் இருக்கிறார்கள். யூடியூப்பின் மூலம் பிரபலமான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இர்பானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை ஒரு பார்ட்டி வைத்து அறிவித்து இருக்கிறார். குழந்தையின் பாலினத்தை துபாயில் உள்ள மருத்துவமனையில் கண்டறிந்துள்ளார்.

இந்த விழாவின் இறுதியில், ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பாலினத்தை அறிவதும், வெளியிடுவதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் இர்பான் மீது வழக்கு பாயும் சூழல் ஏற்பட்டுள்ளது. சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது இர்பானின் வீடியோ நீக்கப்பட்டுள்ளது. அவரும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இர்ஃபானிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் விளக்கம் கேட்ட பிறகு இந்த வழக்கை எப்படிக் கொண்டு போவது என்பது குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}