சென்னை: தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில், இன்று இர்ஃபானிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு உணவகங்களுக்குச் சென்று உணவுகளை சுவைத்து அதனை வீடியோவாக யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் இர்ஃபான். இவருக்கு யூடியூபில் லட்சக்கணக்கான பாலோயர்கள் இருக்கிறார்கள். யூடியூப்பின் மூலம் பிரபலமான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இர்பானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை ஒரு பார்ட்டி வைத்து அறிவித்து இருக்கிறார். குழந்தையின் பாலினத்தை துபாயில் உள்ள மருத்துவமனையில் கண்டறிந்துள்ளார்.
இந்த விழாவின் இறுதியில், ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பாலினத்தை அறிவதும், வெளியிடுவதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் இர்பான் மீது வழக்கு பாயும் சூழல் ஏற்பட்டுள்ளது. சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது இர்பானின் வீடியோ நீக்கப்பட்டுள்ளது. அவரும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இர்ஃபானிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் விளக்கம் கேட்ட பிறகு இந்த வழக்கை எப்படிக் கொண்டு போவது என்பது குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}