டெல்லி: இந்தியா முழுவதும் நாளை 75வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், 1,132 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 பேருக்கும் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாளான ஜனவரி 26 ஆம் தேதியை குடியரசு தின விழாவாக கொண்டாடுகிறோம். இந்த குடியரசு தின விழா, இந்தியா முழுவதும் பெருமையுடனும், அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் நாளாகவும் நாம் கொண்டாடுகிறோம்.
நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடியேற்றுவது வழக்கம். அப்போது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கலாச்சார நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் பல்வேறு முக்கியமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் அணி வகுப்புகள் நடைபெறும்.
நாட்டின் தலைநகரான டில்லியில் உள்ள ராஜ்பாத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைப்பார். பின்னர் பிரமாண்ட அணிவகுப்பும் நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பர். இது மட்டுமல்லாமல் இந்திய அளவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்படும். இதில் காவல் துறையின் நன்மதிப்பு செயல்பாடுகள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
75வது குடியரசு தின விழாவின்போது, பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கும் 1132 பேருக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் 24 பேர் ஆவர்.
ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதன் அடிப்படையில் இந்த வருடம் பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அந்நாட்டு ராணுவ குழுவும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}