Guinnes Record: ஒரு மணி நேரத்தில் 1500 புஷ் அப்கள்.. 59 வயது பெண்மணி அசத்தல்.. கனடாவில்!

Nov 29, 2024,05:16 PM IST

டோரன்டோ:  கனடாவைச் சேர்ந்த டோனாஜீன் வைல்ட் என்ற 59 வயதான பெண்மணி, ஒரு மணி நேரத்தில் 1,575 புஷ்  அப் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

நம் ஊர்களில் தாத்தா-பாட்டி என்றால் வயதாகி இருக்கும், கையில் கம்பு ஊன்றிக்கொண்டு நடக்க முடியாமல் மெதுவாக நடப்பார்கள் என்று தான் நம் நாட்டு பேரக்குழந்தைகளுக்கு தெரியும். ஆனால் கனடா நாட்டில் 59 வயதாகும் பெண்மணி ஒருவர், தனது பேரக்குழந்தைகளுக்கு மிகப் பெரிய சாதனை படைத்து தான் ஒரு ரோல்மாடல் பாட்டி என்பதைக் காண்பித்துள்ளார். அதுவும் என்ன சாதனை தெரியுமா?  சொன்னால் வியந்து போவீர்கள்.



கனடா நாட்டை சேர்ந்த டோனாஜீன் வைல்ட் என்ற 59 வயதான பாட்டி ஒரு மணி நேரத்தில் 1,575 புஷ் அப்களை செய்துள்ளார். இது அவருக்கு 2வது உலக சாதனை ஆகும். தனது முந்தைய சாதனையை முறியடித்து தற்போது இந்த கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த வாரம் ராக்கி மலைகளின் அடிவாரத்தி்ல் உள்ள ஆல்பர்ட்டாவின் பீசரில் உள்ள தனது வீட்டில் இந்த சாதனையை செய்துள்ளார். 

60 நிமிடங்களில் 1,575 புஷ் அப்களை எடுத்துள்ளார். ஒவ்வொரு புஷ்அப்பிற்கும் புஷ்அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவை என்ற நிபந்தனைகளுடன் இந்த சாதனையை செய்துள்ளார். அவர் இதற்கு முன்னர் செய்த சாதனையை 17 நிமிடங்களுக்கு முன்னதாக செய்து முறியடித்துள்ளார்.

இந்த சாதனையை தொடங்கிய போது,  அவரது 12 பேரக்குழந்தைகளும் அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர். அப்போது MY GRANDMA IS OFFICIALLY AMAZING!!! என்று எழுதப்பட்டபோஸ்டர் அவருக்கே அருகில் பேரக்குழந்தைகள் எழுதி வைத்திருந்தனர்.

உங்க வீட்டு பாட்டிகளுக்கு இந்த செய்தியைப் படிச்சுக் காட்டுங்க.. என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

news

மனிதம் மலர்கையில் .. (பகுதி 1)

news

என்னடா இது விசிலுக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து தடை செய்யப்படுவதால் சலசலப்பு!

news

தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? உயர்வா? குறைவா? இதோ முழு விபரம்!

news

இருந்தா மட்டும் போதும்.. I actually don't want anything from you!

news

அரசு விழாக்களில்.. தேசிய கீதத்திற்கு முன்பாக இனி வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்!

news

பிப்ரவரி 22-ம் தேதி முதல்.. தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கும்.. திமுக அறிவிப்பு

news

பகிரங்க கொலை மிரட்டல் .. தேமுதிக நிர்வாகியை கைது செய்ய பத்திரிகையாளர்கள் கோரிக்கை

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்