Guinnes Record: ஒரு மணி நேரத்தில் 1500 புஷ் அப்கள்.. 59 வயது பெண்மணி அசத்தல்.. கனடாவில்!

Nov 29, 2024,05:16 PM IST

டோரன்டோ:  கனடாவைச் சேர்ந்த டோனாஜீன் வைல்ட் என்ற 59 வயதான பெண்மணி, ஒரு மணி நேரத்தில் 1,575 புஷ்  அப் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

நம் ஊர்களில் தாத்தா-பாட்டி என்றால் வயதாகி இருக்கும், கையில் கம்பு ஊன்றிக்கொண்டு நடக்க முடியாமல் மெதுவாக நடப்பார்கள் என்று தான் நம் நாட்டு பேரக்குழந்தைகளுக்கு தெரியும். ஆனால் கனடா நாட்டில் 59 வயதாகும் பெண்மணி ஒருவர், தனது பேரக்குழந்தைகளுக்கு மிகப் பெரிய சாதனை படைத்து தான் ஒரு ரோல்மாடல் பாட்டி என்பதைக் காண்பித்துள்ளார். அதுவும் என்ன சாதனை தெரியுமா?  சொன்னால் வியந்து போவீர்கள்.



கனடா நாட்டை சேர்ந்த டோனாஜீன் வைல்ட் என்ற 59 வயதான பாட்டி ஒரு மணி நேரத்தில் 1,575 புஷ் அப்களை செய்துள்ளார். இது அவருக்கு 2வது உலக சாதனை ஆகும். தனது முந்தைய சாதனையை முறியடித்து தற்போது இந்த கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த வாரம் ராக்கி மலைகளின் அடிவாரத்தி்ல் உள்ள ஆல்பர்ட்டாவின் பீசரில் உள்ள தனது வீட்டில் இந்த சாதனையை செய்துள்ளார். 

60 நிமிடங்களில் 1,575 புஷ் அப்களை எடுத்துள்ளார். ஒவ்வொரு புஷ்அப்பிற்கும் புஷ்அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவை என்ற நிபந்தனைகளுடன் இந்த சாதனையை செய்துள்ளார். அவர் இதற்கு முன்னர் செய்த சாதனையை 17 நிமிடங்களுக்கு முன்னதாக செய்து முறியடித்துள்ளார்.

இந்த சாதனையை தொடங்கிய போது,  அவரது 12 பேரக்குழந்தைகளும் அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர். அப்போது MY GRANDMA IS OFFICIALLY AMAZING!!! என்று எழுதப்பட்டபோஸ்டர் அவருக்கே அருகில் பேரக்குழந்தைகள் எழுதி வைத்திருந்தனர்.

உங்க வீட்டு பாட்டிகளுக்கு இந்த செய்தியைப் படிச்சுக் காட்டுங்க.. என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு

news

Mettur Dam: மேட்டூர் அணை திறப்பு...சேலம் செல்கிறாரா முதல்வர் விஜய்? அதிகாரிகள் திடீர் ஆய்வு

news

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து...நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்

news

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. காதாரத்துறை எச்சரிக்கை

news

குழந்தை பெற்றால் ரூ.55 லட்சம் நிதியுதவி...பிறப்பு விகிதத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு அதிரடி

news

சென்னை மழை முன்னெச்சரிக்கை பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

news

திருஞானசம்பந்தருக்கு முத்துப் பல்லாக்கு கொடுக்கச் சொன்ன சிவபெருமான்!

news

வள்ளிமயிலும்.. கேஸ் கம்பெனியின் eKYC யும்!

news

சிந்தனைச் சிதறல்... மதிப்பு என்பது நாம் வகிக்கும் பதவியைப் பொறுத்து வருவதில்லை!

அதிகம் பார்க்கும் செய்திகள்