சென்னை: கோடை காலத்தை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சென்னையிலிருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
பொதுவாக கோடை காலம் துவங்கி விட்டாலே மக்கள் வெளியூர் மற்றும் வெளிநாட்டுகளுக்குச் சென்று பொழுதுகளைக் கழிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கோடை காலத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அப்போது பொதுமக்கள் பஸ், ரயில் போன்ற சேவைகளைத் தவிர நீண்ட நாள் திட்டத்திற்கு விமான சேவைகளையும் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாகவே வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதன்படி சென்னை விமான நிலையத்தில் தினசரி 50 ஆயிரம் பயணிகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கோடை விடுமுறையை ஒட்டி பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க சென்னை விமான நிலையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதாவது பயணிகளின் வசதிக்காக கோடை காலம் முழுவதும் சென்னை விமான நிலையத்தில் இருந்து 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
{{comments.comment}}