சென்னை: கோடை காலத்தை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சென்னையிலிருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
பொதுவாக கோடை காலம் துவங்கி விட்டாலே மக்கள் வெளியூர் மற்றும் வெளிநாட்டுகளுக்குச் சென்று பொழுதுகளைக் கழிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கோடை காலத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அப்போது பொதுமக்கள் பஸ், ரயில் போன்ற சேவைகளைத் தவிர நீண்ட நாள் திட்டத்திற்கு விமான சேவைகளையும் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாகவே வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் தினசரி 50 ஆயிரம் பயணிகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கோடை விடுமுறையை ஒட்டி பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க சென்னை விமான நிலையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதாவது பயணிகளின் வசதிக்காக கோடை காலம் முழுவதும் சென்னை விமான நிலையத்தில் இருந்து 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை
TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!
விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!
எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்
Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு
10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!
வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு
மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!
{{comments.comment}}