சென்னை: கோடை காலத்தை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சென்னையிலிருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
பொதுவாக கோடை காலம் துவங்கி விட்டாலே மக்கள் வெளியூர் மற்றும் வெளிநாட்டுகளுக்குச் சென்று பொழுதுகளைக் கழிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கோடை காலத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அப்போது பொதுமக்கள் பஸ், ரயில் போன்ற சேவைகளைத் தவிர நீண்ட நாள் திட்டத்திற்கு விமான சேவைகளையும் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாகவே வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதன்படி சென்னை விமான நிலையத்தில் தினசரி 50 ஆயிரம் பயணிகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கோடை விடுமுறையை ஒட்டி பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க சென்னை விமான நிலையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதாவது பயணிகளின் வசதிக்காக கோடை காலம் முழுவதும் சென்னை விமான நிலையத்தில் இருந்து 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
22ம் தேதி முருகனை கையில் எடுப்பது போல் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்: நயினார் நாகேந்திரன்
சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு... தமிழ்த் திரையுலகுக்கு புதுத் தெம்பு.. கமல்ஹாசனின் ரியல் Thuglife
கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்.. தக்லைபுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை: எடப்பாடி பழனிச்சாமி!
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 குறைவு!
சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்
4 ராசிகளில் நீங்களும் ஒருவரா?..2025ல் பெரிய கோடீஸ்வரரா ஆய்ருவீங்களாம்ய்யா..பாபா வங்காவே சொல்லிட்டாரு
{{comments.comment}}