சென்னை: பராமரிப்பு பணி காரணமாக பொன்னேரி கவரப்பேட்டை இடையே 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 27 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மார்ச் 13 மற்றும் 15 தேதிகளில் பொன்னேரி- கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக பொன்னேரி - கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 27 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொன்னேரி கவரப்பேட்டை இடையே மார்ச் 13, 15 ஆகிய தேதிகளில் 27 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை - கும்மிடிப்பூண்டி இடையிலான ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்த விவரம்:
காலை 9 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகம் டூ பொன்னேரி ,
காலை 9.30 மணிக்கு மூர்மார்க்கெட் வளாகம் டூ எண்ணூர்,
காலை 10.30 மணிக்கு மூர்மார்க்கெட் வளாகம் டூ பொன்னேரி,
காலை 11.35 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகம் டூ மீஞ்சூர்,
மதியம் 11.42 பொன்னேரி டூ மூர் மார்க்கெட் வளாகம்,
மதியம் 12.40 சென்னை கடற்கரை டூ பொன்னேரி ,
மதியம் 12.43 மணிக்கு எண்ணூர் - மூர் மார்க்கெட் வளாகம்,
மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி - மூர் மார்க்கெட் வளாகம்,
மதியம் 2.59 மணிக்கு மீஞ்சூர் டூ மூர் மார்க்கெட் வளாகம்,
மதியம் 3.33 மணிக்கு பொன்னேரி டூ மூர் மார்க்கெட் வளாகம் என 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}