பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. இந்த ஞாயிறும்.. தாம்பரம் டூ சென்னை பீச் இடையே.. 44 ரயில்கள் ரத்து!

Feb 23, 2024,09:55 PM IST

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள், அதாவது ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரை டூ தாம்பரம் மற்றும் தாம்பரம் டூ சென்னை கடற்கரை என்ற இரு மார்க்கத்திலும் செல்லும்  44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


வீக் என்ட் என்றாலே சந்தோஷத்திற்கு இணையே கிடையாது. ஏனென்றால் ஞாயிறுதோறும் அனைத்து அலுவலகங்கள், பள்ளிகள், கடைகள்,பொது வளாகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை விடப்படும். அன்று அனைவரும் தங்கள் குடும்பத்துடன் குழந்தைகளுடன் வெளியில் சென்று சந்தோஷமாக விடுமுறை நாட்களை கொண்டாடி மகிழ்வர். 


அன்றைய தினம் பொதுமக்கள் அதிகமாக வெளியில் வருவர். அப்போது போக்குவரத்து சேவை மிகவும் அத்தியாவசிய தேவையாக கருதப்படும். குறிப்பாக சென்னை போன்ற பெரிய நகரங்களில் வசிக்கும் மக்கள் மெட்ரோ ரயில் சேவை, புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சமீப மாதங்களாக, சென்னையில் பராமரிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவையில் சற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.




வரும் ஞாயிற்றுக்கிழமையும் பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக தாம்பரம் டூ சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கம் டூ தாம்பரம் இடையே நாளை மறுநாள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3:15 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதனால் சென்னை கடற்கரை டூ தாம்பரம் மற்றும் தாம்பரம் டூ சென்னை கடற்கரை என்ற இரு மார்க்கத்திலும் செல்லும் 44 புறநகர்  ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  


செங்கல்பட்டு டூ சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்கள் அனைத்தும், தாம்பரம் டூ செங்கல்பட்டு இடையே பயணிகள் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


தற்போது  சென்னையில் 44  புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால்  பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் பயணிகளின் தேவைகளுக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளை கூடுதலாக இயக்க தெற்கு ரயில்வே தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டபோது கூடுதலாக மெட்ரோ ரயில்களும், பஸ்களும் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்