சென்னை: 48வது புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் இன்று தொடங்கும் 48வது புத்தக கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. விஷ்ணுபுரம் அரங்கு எண் 205 - 206ல் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ள தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர்.
புத்தக கண்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெரும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் சலுகை விலையில் விற்கப்பட உள்ளன.
ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், சிறந்த புத்தக விற்பனையாளர்களுக்கு பபாசி பரிசுகள் மற்றும் பொற்கிழி விருதுகள் வழங்கிப் பட உள்ளன.
அந்த வகையில், இந்தாண்டிற்கான முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருது பேராசிரியர் அருணன், நெல்லை ஜெயந்தா, சுரேஷ்குமார் இந்திரஜித், என்.ஸ்ரீராம், கலைராணி, நிர்மால்யா ஆகிய 6 பேருக்கும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!
பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்
கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!
5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!
பெண்ணாதிக்கம்!
{{comments.comment}}