ஹைதராபாத்: தெலங்கனாவை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஒரே நேரத்தில் 5 அரசு வேலைகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் நல்ல வேலை கிடைப்பது என்பது பெரிய சவாலகவே இருந்து வருகிறது. படித்த படிப்பிற்கும் வேலை கிடைப்பதில்லை. சரி கிடைக்கும் வேலையை செய்யலாம் என்று எண்ணி தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்பவர்களுக்கு நல்ல சம்பளம், மரியாதை எல்லாம் கிடைத்தாலும், பார்க்கும் வேலை எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் என்று தெரியாத நிலை இருந்து வருகிறது.
இதன் காரணமாகவே படித்த இளைஞர்கள் எப்படியாவது அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். பணி பாதுகாப்பு, அரசு சலுகைகள், குறிப்பிட்ட வயதுவரை நிரந்தர வருமானம் உள்ளிட்ட பல காரணங்களினால் அரசு வேலையை வாங்க வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். ஒரு காலகட்டத்தில் படித்து முடிந்தால் அரசு வேலை என்று இருந்தது. அது தற்போது அரிதாகி விட்டது. இன்றைய காலகட்டத்தில் அரசு வேலைக்கு சொல்ல வேண்டும் என்றால் பல தேர்வுகளை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காக அதிகளிவில் பணத்தையும், நேரத்தையும் செலவிலத்து வருகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்.

பல முறை தேர்வுகளை எழுதுகின்றனர். எப்படியாவது ஒரு தேர்விலாவது மதிப்பெண்களை பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்து வருகின்றனர். இப்படி படித்தாலும் 1 மார்க் 2 மார்க்கில் பணி கிடைக்காத சூழலும் எற்படுகிறது. ஆனால், தெலுங்கானாவின் கரீம்நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஒரே நேரத்தில் 5 அரசு வேலைகளை தேர்வின் மூலம் பெற்றுள்ளார்.
தற்போது ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜசேகர் TGT, PGT, Junior Lecturer, Group-4, TGPSC முடிவுகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இது எப்படி சாத்தியமானது என்று கேட்டதற்கு ஒவ்வொரு தேர்வையும் சவாலாக எடுத்துக் கொண்டதால் இது சாத்தியமானதாக அவர் தெரிவித்து வருகிறார். தனது அண்ணன்தான் தனது ரோல்மாடல் என்றும் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் ராஜசேகர் கூறியுள்ளார் ஏற்கனவே பல பட்டங்களைப் பெற்றுள்ள ராஜசேகர் தொடர்ந்து படித்து வருவதாகவும் கூறுகிறார். தான் மட்டுமல்ல, திட்டமிட்டு சின்சியராக தேர்வுக்கு தயார் செய்து கொண்டாலும் எல்லோராலும் தன்னைப் போலவே தேர்ச்சி பெற முடியும் என்றும் இவர் கூறுகிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}