புயலால் பெரும் பாதிப்பு.. மத்திய அரசிடம் ரூ. 5000 கோடி உதவி கேட்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

Dec 05, 2023,04:49 PM IST
சென்னை: மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் கோடி கேட்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிச்சாங் புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. நிவாரணப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மத்திய அரசு தரும் நிதியை பொறுத்து தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது. நான்கு நாட்களில் முழு நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். ஏற்கனவே பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். ஆனால், இது வரலாறு காணாத வகையில் மழை பதிவாகியுள்ளது.

தற்போது பெய்த மழை கடந்த காலத்தை விட அதிகமாக உள்ளது. அரசின் நடவடிக்கையால் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. 9  மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பேர் நிவார முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் தண்ணீர் வெளியேற தாமதம் ஆனது.



மழை பாதிப்பை அரசியல் ஆக்க நான் விரும்பவில்லை. மழை பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி பொய்யான தகவல்களை கூறுகிறார். 75 சதவீத இடங்களில் பணிகள் சீரானது. மீதமுள்ள 25 சதவீதம் பணிகள் நாளைக்குள் சரிசெய்யப்படும். மழை நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் 5000 கோடி கேட்க உள்ளோம். அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். 

சென்னையில் இயல்பு நிலைமை வெகு விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை சீற்றங்களால் மக்கள் இன்னல்களுக்கு ஆளானாலும் அவர்களை அதிலிருந்து மீட்டு நடவடிக்கையில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்